திருப்பூர், அக்.8- திருப்பூர் மாநகராட்சி 55 ஆவது வார்டு கே.எம்.ஜி. நகர் முதல் வீதியில் உள்ள ரேஷன் கடை எண் 59- 4 உள்ளது. இந்த கடையில் சனியன்று மதியம் 2 மணி அளவில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுவதை அறிந்து, வெள்ளியங்காடு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்காணித்து, கையும் களவு மாக பிடித்தனர். ரேஷன் அரிசியை வண்டியில் ஏற்றும் போது பொது மக்கள் உதவியுடன் இதைச் செய்தனர். பின்னர் அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நேரில் வந்து ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் சொத்தை கொள்ளையடிக்கும் திருடர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் அதிகாரியிடம் வலியுறுத்தினர்.