சேலம், அக்.19- பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுவில், துறை வளர்ச்சி, விவசாயிகள் முன் னேற்றம், ஊழியர் நலன் ஆகியவற்றை மையப்படுத்தி கருத்த ரங்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படை யில் சேலம் வி.பி.சிந்தன் நினைவகத்தில் சனியன்று கருத்தரங் கம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ். ஹேமா நந்தினி தேவி தலைமை வகித்தார். மாநிலச் செயலா ளர் ஆர்.சரவணன் வரவேற்றார். பொதுச்செயலாளர் என்.சுரேஷ் குமார் அறிமுக உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுரேஷ், பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்க முன்னாள் பொதுச்செயலாளர் பி.கோவிந்த சாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். “பட்டு விவசாயிகளின் முன்னேற்றத்தில் ஊழியர்களின் பங்கு” குறித்து மாநிலத் தலைவர் வி.வெங்கடேஷ், “ஊழியர் நலனும் அரசின் நிலைப் பாடும்” குறித்து அரசு ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.சீனிவாசன் ஆகியோர் கருத்துரையாற்றினர். முடிவில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சொர்ணா நன்றி கூறினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.