districts

img

சாம்சங் இந்தியா தொழிலாளர்களுக்கு ஆதரவாக சக்தி காம்போனேன்ட் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப்.25 - சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் நியாயமான கோரிக் கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பல்ல  கவுண்டம்பாளையம் சக்தி காம்போனென்ட் சிஐடியு தொழி லாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத் தினர்.  திருப்பூர் மாவட்டம் பல்ல கவுண்டம்பாளையம் சக்தி ஆட்டோ காம்போனென்ட் ஆலை முன்பாக புதன்கிழமை சங்கத் தலைவர் ஆர்.பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. துணைத் தலைவர் கே.அர்ஜுனன், பொரு ளாளர் எஸ்.கே.சந்திரமூர்த்தி, துணைத் தலைவர் எம்.ராஜா  ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஜி.சம்பத், சங்கச் செயலாளர் ஜெ.கந்த சாமி, சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் கே.கண்ணை யன், துணைச் செயலாளர் வி.காமராஜ் ஆகியோர் சாம்சங் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்தும், அவர்களது கோரிக்கை குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினர். இதில் சக்தி ஆட்டோ காம்போனென்ட் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண் டனர். நிறைவாக துணைச் செயலாளர் ஆர்.சிவராஜ் நன்றி  கூறினார்.