districts

img

அஞ்சலகத்தில் பள்ளி மாணவர்கள் சுற்றுலா!

கோவை, அக்.9- தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு, கோவையிலுள்ள தலைமை தபால் நிலையத் திற்கு பள்ளி மாணவர்கள் சென்று, அங்கு நடைபெறும் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் அக்.9 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தில் அஞ்சல் துறை சார்பில் பல்வேறு  நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதனி டையே இந்தாண்டு “நம்பிக்கைக்காக ஒன்று படுவோம்” என்ற தலைப்பில் அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவையிலுள்ள வெவ்வேறு அஞ்சல் அலு வலகங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகை யில் கோவை கூட்செட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட தபால் தலை கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு பள்ளி மாணவர்கள் அஞ் சல் அலுவலகம் வந்திருந்தனர். இவர்கள் அஞ்சல் துறையினர் செயல்பாடுகள், அஞ் சல் துறையால் வெளியிடப்பட்ட தபால் தலை களை பார்வையிட்டனர். அஞ்சலக ஊழியர் கள் மாணவர்களுக்கு அஞ்சல் உறைகளை  வழங்கி கடிதம் எவ்வாறு அனுப்ப வேண்டும் என்பது குறித்து தெரிவித்தனர். அடுத்த ஒரு வாரத்திற்கு தலைமை தபால் நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக வும், இதில் மாணவர்கள் மற்றும் பொதுமக் கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அஞ்சல்  ஊழியர்கள் தெரிவித்தனர்.