சேலம், ஜன.7- நாடகத்தந்தை என போற்றப்படும் து.சா.சங்கரதாஸ் சுவாமிகளின் 101 ஆம் ஆண்டு குருபூஜை விழா சேலத்தில் நடைபெற்றது. சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்க அரங்கில், நாடகத் தந்தை என போற்றப்படும் து.சா.சங்கரதாஸ் சுவாமிகளின் 101 ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. முன்னதாக, சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து சங்கர தாஸ் சுவாமிகளின் சிலை அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதன்பின் நடிகர் சங்க வளாக இடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கத் தலைவர் எம்.எல்.கண் ணன், செயலாளர் முத்து, துணைத்தலைவர் சரவணன், துணைச்செயலாளர் ஏ.பி.சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, 35க்கும் மேற்பட்ட இலக்கியங்களை உருவாக்கி நாடக நடிகர்கள் மத்தியில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியவர் சங்கரதாஸ் சுவாமிகள் என நாடகக் கலை ஞர்கள் தெரிவித்தனர்.