சேலம், நவ.30- சேலத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா புதனன்றுடன் நிறைவுபெறவிருந்த நிலையில், வாசிப்பார்கள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று டிச.4 ஆம் தேதி வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் அறிவித்துள்ளார். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற் பனையாளா்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங் கம் (பபாசி) இணைந்து நடத்தும் சேலம் புத்த கத் திருவிழாவை நவ.20 ஆம் தேதியன்று நக ராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். புத்தக திருவிழா வில் சுமார் 200க்கும் மேற்பட்ட அரங்குகள், ரூ.10 முதல் ஆயிரம் ரூபாய் வரையிலான புத்தகங்கள், கலை இலக்கியம், சமுதாயம், நவீன இலக்கியம், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள், முற்போக்கு, அரசு வேலை வாய்ப்பு தேர்வுக்கான நூல்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு புத்தகங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதி னருக்கும் ஏற்ற வகையில் 50 ஆயிரம் தலைப் புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற் பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் அனைத்து நூல்களுக் கும் 10 சதவிகித தள்ளுபடி வழங்கப்படுகிறது.
பிற மொழிகளில் இருந்து மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகங்கள், சிறுவர்களுக் கான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. மாற்றுத்திறனாளிகள் நூலகத்தில் பார்வை யற்றவர்கள் படிக்கும் வகையில் பிரெய்லி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நாளொன் றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல் லூரி மாணவ, மாணவிகள், வாசகர்கள், புத் தக ஆர்வலர்கள் திரண்டு வந்து பார்வை யிட்டு வருகின்றனர். இதுவரை 2 லட்சத்துக் கும் மேற்பட்டவர்கள் இந்த புத்தக கண்காட் சியை பார்வையிட்ட நிலையில் சுமார் ரூ.2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் 456 புத்தகங்கள் ரூ.63 ஆயிரத்து 578க்கு விற்பனை செய்யப்பட் டுள்ளன.
புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் இலக்கிய சிந்தனை உரைகள், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டி கள், பொதுமக்களைக் கவரும் வகையிலான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின் றன. சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் நடை பெறும் புத்தகத் திருவிழாவுக்கு நாளுக்கு நாள் வரும் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த புத்தகத் திருவிழா புதன்கிழமையுடன் (நேற்று) நிறைவடைய இருந்தது. இந்நிலை யில், புத்தகத் திருவிழாவை டிச.4 ஆம் தேதி வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மே கம் அறிவித்துள்ளார். புத்தக வாசிப்பாளர் கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புத்தகத் திருவிழா 4 நாட்கள் நீட்டிக் கப்பட்டுள்ளதாகவும், எனவே பொதுமக்க ளும், புத்தக ஆர்வலர்களும் இதனை பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சேலம் புத்தக திருவிழாவிற்கு அரசு ஒதுக் கிய ரூ.17.50 லட்சம் நிதியுடன் சேர்த்து, பல் வேறு கல்வி நிறுவனங்கள், நன்கொடையா ளர்கள் வழங்கிய நிதி என ரூ.1 கோடி செலவு செய்து புத்தகத் திருவிழா நடைபெற்று வரு வது குறிப்பிடத்தக்கது.