தருமபுரி, ஜன.6- கடந்தாண்டில் மட்டும் வாகன சோதனை மூலம் தருமபுரி மாவட்டத் தில் ரூ.3.25 கோடி வசூல் செய்யப் பட்டுள்ளதென வட்டார போக்குவ ரத்து அலுவலர் தாமோதரன் தெரி வித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் கடந் தாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 12 மாதங்களில் போக்குவரத்து துறை யின் சார்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் த.தாமோதரன் தலைமை யில், தருமபுரி மோட்டார் வாகன ஆய் வாளர் அ.க.தரணீதர், பாலக்கோடு பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கு.வெங்கிடுசாமி, அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகி யோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் வாகன தணிக்கை மேற்கொண் டனர். ஏறத்தாழ 25 ஆயிரம் வாகனங் கள் தணிக்கை செய்யப்பட்டு, 7130 வாகனங்களுக்கு தணிக்கை அறிக் கைகள் வழங்கப்பட்டன. இதில் காலாண்டு வரி செலுத்தாமல் இயக் குதல், தகுதிச்சான்று, காப்புச்சான்று, புகைச்சான்று புதுப்பிக்காமல் இயக் குதல், அனுமதி சீட்டு இல்லாமல் இயக்குதல் போன்ற குற்றங்களுக் காக 676 வாகனங்கள் சிறைபிடிக்கப் பட்டன. மேலும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக 233 வாகனங்களுக்கும், அதிக பாரம் ஏற் றிச்சென்ற 92 வாகனங்களுக்கும், அனுமதீச்சீட்டு இல்லாமல் இயக்கிய 145 வாகனங்களுக்கும், அதிவேக மாக வாகனங்களை இயக்கிய 4245 வாகனங்களுக்கும், தகுதிச்சான்று பெறாமல் இயக்கிய 371 வாகனங் களுக்கும், காப்புச்சான்று/புகைச் சான்று இல்லாமல் இயக்கிய 998 வாகனங்களுக்கும், சிகப்பு நிற பிரதி பலிப்பான் இல்லாமல் இயக்கிய 585 வாகனங்களுக்கும் மற்றும் சிகப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கிய 334 வாகனங்களுக்கும் வாகன தணிக்கையின் பொழுது அப ராதம் விதிக்கப்பட்டது. மேற்கண்ட வாகன சோதனை யின் மூலமாக அரசுக்கு சாலை வரி யாக ஒரு கோடியே 22 லட்சத்து 19 ஆயிரத்து 580 ரூபாய் மற்றும் இணக்க கட்டணமாக ரூ.83 லட்சத்து 4 ஆயி ரத்து 950 என மொத்தம் ரூ.2 கோடியே 5 லட்சத்து 24 ஆயிரத்து 530 உடன டியாக வசூலிக்கப்பட்டது. மேலும், இந்த வாகன சோதனை மூலம் பல் வேறு குற்றங்களுக்கு இணக்க கட்ட ணமாக ஒரு கோடியே 19 லட்சத்து 94 ஆயிரத்து 485 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டில் தருமபுரி வட்டார போக்கு வரத்து அலுவலகம் சார்பில் வாகன சோதனை மூலம் மொத்தம் ரூ.3 கோடியே 25 லட்சத்து 19 ஆயிரத்து 15 வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தொப்பூர் மலைப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பான 30 கி.மீ. மேல் இயக்கப்படும் வாகனங் களுக்கு போக்குவரத்து துறை சார் பில் வேகம் கண்காணிக்கும் கருவி உதவியுடன் கடந்த இரண்டரை ஆண் டுகளில் 11,960 வாகனங்களுக்கு இ-சலான் மூலம் ரூ.86 லட்சத்து 12 ஆயிரத்து 425 அபராதம் விதிக்கப்பட் டுள்ளதென தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் த.தாமோ தரன்.தெரிவித்துள்ளார்.