கோவை, டிச.4- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கோவை மாவட்ட மாநாடு சனியன்று கோவை தாமஸ் கிளப் வளா கத்தில் உள்ள அறிவொளி சங்கர் அரங்கில் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.தனபால் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ச.சங்கர் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் சை.சையது உசேன் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆ.பத்மா வதி, ப.ரேவதி ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். மாநில துணைத்தலைவர் கு.குமரேசன், மாநிலச் செயலா ளர் ப.செந்தில் குமார், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் ஜெகநாதன், பொருளாளர் நடராஜன் உள்ளிட்டோர் உரை யாற்றினர். உயர்த்தப்பட்ட ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச்செயலாளர் சு.சங்கரலிங்கம் நிறைவுரை யாற்றினார். முடிவில், மாவட்ட துணைத்தலைவர் மூ.சித்ரா நன்றி கூறினார்.