districts

img

தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச. 26- அரசாணைப்படி ஊதியம், பணி  நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஈரோட்டில், சிஐ டியுவினர் மாநகராட்சி அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஈரோடு மாநகராட்சியில் பொது  சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், ஓட்டு நர்கள், சுகாதார மேற்பார்வையா ளர்கள், டெங்கு, மலேரியா கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் குடி நீர் விநியோகம் உள்ளிட்ட பிரிவுக ளில் ஊழியர்கள் பணியாற்றி  வருகின்றனர். இத்தொழிலாளர்க ளுக்கு பணி நிரந்தரம், அரசா ணைப்படி ஊதிய உயர்வு ஆகி யவை வழங்கப்பட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள் ளாட்சி சங்கத்தினர் பலமுறை கோரிக்கை வைத்தும், போராட்டங் ்கள் நடத்தியும் எவ்வித முன்னேற்ற மும் இல்லை. இதனையடுத்த, மாந கராட்சி நிர்வாகம் செவிசாய்க்காத நிலையில் டிச.26 முதல் வேலை நிறுத்தம் அறிவித்தது.  இதனைத் தொடர்ந்து தொழிலா ளர் துறை தலையிட்டு இரண்டு கட்ட  பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இதில், உடன்பாடு ஏற்படாத நிலையில் மாநகராட்சி நிர்வாகம் கால அவகாசம் கேட்டது. அதன டிப்படையில் வரும் 30 ஆம் தேதிக்கு பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையில் அறிவிக்கப் பட்ட வேலை நிறுத்தம் தற்காலிக மாக ஒத்தி வைக்கப்பட்டு வியாழ னன்று சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் சங்கத்தின் பொருளா ளர் ஏ.ஜெகநாதன் தலைமை வகித் தார். சங்கத்தின் தலைவர் எஸ்.சுப் ரமணியன், செயலாளர் எஸ்.மாணிக்கம் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். சிஐடியு  மாவட்டத் தலைவர் எச்.ஸ்ரீராம்  மற்றும் அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் ச.விஜயமனோக ரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில், திரளான தூய்மைப் பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.