districts

img

அரசு நிலத்தில் மனமகிழ் மன்றம்: மருத்துவமனை விரிவாக்க பணிகளுக்கு பயன்படுத்த கோரிக்கை

உடுமலை, ஜன.11- உடுமலை அரசு மருத்துவமனை யில் நோயாளிகள் நலசங்கத்தின் கூட் டம் சில மாதங்களாக கூட்டப்படாமல்  உள்ளது. உடனடியாக கூட்டத்தைக் கூட்டி, புதிய கட்டிடம் திறப்பு மற்றும்  மனமகிழ் மன்ற இடத்தை மருத்து வமனை விரிவாக்க பணிகளுக்கு பயன்படுத்துவது குறித்து தீர்மானம்  நிறைவேற்ற வேண்டும் என நோயா ளிகள் கோரிக்கை வைத்துள்ளார் கள். தமிழகம் முழுவதும் அரசு மருத் துவமனைகளில் நோயாளிகளின் நலன்கள், தேவைகள் குறித்து அர சின் கவனத்திற்கு கொண்டு செல்லும்  வகையில் நோயாளிகள் சங்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உடு மலை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் நலச் சங்கத்தின் கூட் டம் பெயரளவில் மட்டுமே சில மாதங் களுக்கு முன்பு நடைபெற்றதாகவும், இதனால் மருத்துவமனைக்கு எந்த  அடிப்படை தேவையும் நிறைவேற் றப்படாமல் உள்ளது. எனவே உடன டியாக சங்கத்தின் கூட்டத்தை கூட்ட  வேண்டும் என்று கோரிக்கை எழுந் துள்ளது.  தற்பொழுது நாடுமுழுவதும் கொரானா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பல மாதங்கள் மருத்துவ மனையில் நடைபெற்று வந்த புதிய  கட்டிட பணிகள் முடிந்து ஒரு மாதத் திற்கு மேலாளாகியும் திறப்பு விழா  நடைபெறாமல் உள்ளது. மேலும், மருத்துவமனைக்கு எதிரில் உள்ள அரசின் நிலத்தில் இருக்கும் மன மகிழ் மன்ற இடத்தை மருத்து வமனை விரிவாக்க பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என நோயா ளிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும், கடந்த வருடம் உடுமலை அரசு மருத் துவமனையில் பிரசவ அறையில் மருத்துவரால் ஏற்பட்ட பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மருத்துவர்கள், மருத்து வமனை பணியாளர்கள் மற்றும்  மக்களின் தேவைகளை அரசின் கவ னத்திற்கு கொண்டு செல்ல இந்த கூட் டத்தை கூட்ட நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.