districts

img

ஓடையில் தேங்கி நிற்கும் நெகிழிகளை அகற்ற கோரிக்கை

கோபி, நவ.25- கோபி அருகே கழிவுநீர் ஓடை யில் தேங்கி நிற்கும் நெகிழிக் கழிவு களை அப்புறபடுத்த வேண்டும் என  அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி நக ராட்சியின் சாக்கடை கழிவுநீர், கீரிப் பள்ளம் ஓடை வழியாக பதி என்ற  இடத்தில் பாசன வாய்க்காலில் கலக் கிறது. இச்சாக்கடை கழிவுநீர் ஓடை யில் இரவு நேரங்களில் நகர் பகுதியினர் மற் றும் அடையாளம் தெரியாத நபர்கள் நெகிழி,  தெர்மாகோல், மக்காத அட்டை பெட்டிகள் உள்ளிட்டவையை மூட்டைகளாக கட்டி ஓடை யில் வீசி சென்று விடுகின்றனர். இதனால், சாக் கடை கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு,  கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது. கழிவு நீர் செல்ல முடியாமல் சாலையில் பெருக் கெடுக்கும்போது, ஓடையில் தேங்கியுள்ள  கழிவுகளை முழுமையாக அப்புறப்படுத்தா மல், பெயருக்கு அடைக்கப்பட்ட கழிவுகளை  அப்புறப்படுத்துவதால், சுகாதார சீடுகேடு ஏற்படுகிறது. எனவே, ஓடையில் தேங்கும் நெகிழி கழிவுகளை முழுமையாக அப்புறப் படுத்த வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.