districts

img

குழந்தைகளின் கல்வியை பாதுகாக்கக்கோரி கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மனு

நாமக்கல், ஆக.16- குழந்தைகளின் கல்வியை பாதுகாக்க வேண்டும் என வலி யுறுத்தி, எலந்தகுட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா, பள்ளிபா ளையம் ஒன்றியம், எலந்தகுட்டை ஊராட்சியில் வியா ழனன்று, ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கல்வி அதிகாரி யிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு ஒன்றை வழங்கி னர். அதில், வெப்படை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். அதில், எங்கள் குழந்தைகளும் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாக பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், குழந்தைக ளுக்கும். பெற்றோர்களுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டு வருகிறது. மேலும், குழந்தைகளின் கற்றல் திறனும் பாதிக் கப்பட்டு வருகிறது. எனவே, இந்த மனு மீது உரிய நடவ டிக்கை எடுத்து, குழந்தைகளின் கல்வியை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.