districts

img

டேன்டீ தோட்டத் தொழிலாளர்களுக்கு நிர்ணயித்த கூலி வழங்குக

உதகை, அக்.29- டேன்டீ தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த கூலி வழங்க வேண்டுமென சிஐடியு பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  சிஐடியு நீலகிரி மாவட்டக்குழு சார்பில் பேரவைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் எல்.சங்கரலிங்கம் தலைமை ஏற்றார். மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் கே.ரங்கராஜ்,  மாவட்டச் செயலாளர் சி.வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.   முன்னதாக, நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும். தமிழ்நாடு அரசு சொந்தமான டேன்டீ தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். நீலகிரி மாவட்ட இண்டிகோ தேயிலை தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாதம் முழுவதும் பணி வழங்க வேண்டும். டேன்டீ மற்றும் அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் அரசு நிர்ணயித்த கூலியை வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு வெண்டிங் கமிட்டி தேர்தலை நடத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.