சேலம் ஜூன் 12- ஒப்பந்தப்படி பண பலன்களை வழங்க வலியுறுத்தி ஏபிடி மற்றும் ஏஆர்சி பார்சல் தொழிலாளர்கள் ஒர்க்கர்ஸ் மற்றும் ஸ்டாப் யூனியன் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஏபிடி பார்சல் சர்வீஸ் மற்றும் ஏஆர்சி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்க ளுக்கு ஒப்பந்தப்படி பண பலன்களை வழங்க வேண்டும். பணிமனைகளை மூடும் முடிவை கைவிட வேண்டும். தொழிலாளர்களை பழி வாங்கும் நோக்கோடு வேறு பணிமனைக ளுக்கு மாற்றக்கூடாது. கொரோனா கால நிவாரணங்களை வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகி விஸ்வேஸ்வரன் தலைமையில் கெஜல்நாய் கன்பட்டி பணிமனை முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில். சிபிஎம் பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஏபிடி - ஏஆர்சி தொழிற் சங்க நிர்வாகிகள் கே.கோவிந்தன். பி.கணே சன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.