காட்டு யானை தாக்கி விவசாயி பலி
காட்டு யானை தாக்கி விவசாயி பலி கோவை, ஜன.16- பெரியநாயக்கன்பாளையம் பழைய புதூர் பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சர கத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வெளியே வந்த காட்டு யானை ஒன்று பெரியநாயக்கன் பாளையம் அடுத்த பழைய புதூர் பகுதியில் உலா வந்தது. அப்போது மேட்டுத்தோட்டத்தை சேர்ந்த விவசாயி வேலு மணி (74) என்பவர், தனது தோட்டத்திற்கு பின்புறம் உள்ள இரும்பு கதவை பூட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது திடீ ரென அங்கு வந்த ஒற்றைக் காட்டு யானை அவரை தாக்கி யது. இதில், வேலுமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். இதையடுத்து அருகே உள்ள மற்றொரு பகுதிக்குச் சென்ற யானை அங்கு பயிரிடப்பட்ட வாழைகளை உண் டது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த பெரிய நாயக்கன்பாளையம் சரகம் வனத்துறையினர் மற்றும் போலீ சார் விவசாயி வேலுமணியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய் வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இதனிடையே வனத்துறையினர் ஒலி எழுப்பி காட்டு யானையை அடர் வனப் பகுதிக்குள் விரட்டினர். அடிக்கடி காட்டு யானைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வரு வதால் அதனை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைய எதிர்ப்பு
கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைய எதிர்ப்பு நாமக்கல், ஜன.16- இடும்பன் குளத்தில் கழிவுநீர் சுத்தகரிப்பு ஆலை அமைப் பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருமணிமுத்தாறு ஆறு பாயும் பகு திகளான, வில்லிபாளையம், பிள்ளைகளத்தூர், மாவிரெட்டி, கரட்டுப்பாளையம், ஓவியம் பாளையம், மாவு ரெட்டி தேவி பாளையம், கீழக்கடை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங் கள் உள்ளது. இந்த திருமணி முத்தாற்றின் மூலம் விவசாயத் துக்கு பயன்படுத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் இந்த நீரை குடிநீருக்காகவும் பயன்படுத்தி வருகிறார்கள். இது தவிர பரமத்தி தாலுகாவுக்கு உட்பட்ட நீதிமன்றம், பரமத்தி பேரூ ராட்சி மற்றும் வார சந்தை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இந்த நீர் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் இதன் அருகே உள்ள இடும்பன் குளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதாற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நீர் நிலைகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை வந்தால், நிலத்தடி நீரும் மாசுபடும், துர்நாற்றம் வீசும். கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர் கேடு, தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயம், கால்நடைகள், மக்கள் குடிநீர் தேவைகள் பாதிக்கப்படும். எனவே, இந்த இடும்பன் குளத்தில் அமையவுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை மாவட்ட நிர்வாகம் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி, திருமணிமுத்தாறு இடும்பன் குளம் விவசாயிகள் மற்றும் சுற்றுவட்டார பொது மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக சுமார் 300 பேர் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்திருந்தனர். ஆனால், இதுவரையில் எவ்வித அறிவிப்பும் மாவட்ட நிர் வாகம் வெளியிடவில்லை. மக்கள் எதிர்ப்பையும் மீறி கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை அமைய மாவட்ட நிர்வாகம் முயற்சித் தால், விவசாயிகள் ஒன்றிணைத்து முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் எச்ச ரிக்கை செய்துள்ளனர்.
பாலியல் சீண்டல்: ஆசிரியர் பணி நீக்கம்
சேலம், ஜன. 16- சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களிடம் பள்ளியின் தலைமை ஆசிரி யர் சுப்பிரமணியன் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இத னைத் தொடர்ந்து சம்பந்தப் பட்ட ஆசிரியரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஆசிரியர் சுப்பிர மணியன் தொடர்ந்து இதே போன்ற ஒரு ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வந் தது தெரிய வந்ததை தொடர்ந்து மாவட்ட கல்வித் துறை சார்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் சுப்பிர மணியத்தை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை ஜன.20,21,22 மூன்று நாள் தெருமுனைப் பிரச்சாரம்
அவிநாசி,ஜன.16- விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன் வைத்து, திருப்பூர் மாவட்டத்தில் மூன்று நாட்கள் தெருமுனைப் பிரச்சார இயக்கத் தில் ஈடுபட சிஐடியு விசைத்தறி தொழிலா ளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து, சிஐடியு திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங் கத்தின் மாவட்டத்தலைவர் வேலுசாமி, செயலாளர் பி.முத்துசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது, விசைத்தறி தொழிலை பாது காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும், விசைத்தறி தொழிலா ளர்களுக்கு 8 மணி நேர வேலைக்கு மாத ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண் டும். இஎஸ்ஐ, பிஎப், அடையாள அட்டை வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.8000 வழங்க வேண்டும். விசைத்தறி தொழி லாளர்களுக்கு இலவச வீடுகள் கட்டித் தர வேண்டும். தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும். ஒன்றிய அர சின் ஜவுளி கழக தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த இன்சூரன்ஸ் திட்டத்தை மீண்டும் வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலில் உள்ள மாவட்டங்களில் ஜவுளி சந்தை ஏற்படுத்த வேண்டும். நலவாரிய செயல்பாடுகளை உறு திப்படுத்த, தொழிலாளர்களுக்கு பணப் பயன்கள் காலதாமதம் இன்றி வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலுக்கான மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். ஜவுளி உற்பத்தியா ளர்கள் விசைத்தறி உரிமையாளருக் கான ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.20, 21, 22 ஆகிய தேதிகளில் திருப்பூர் மாவட்டத்தில் தெருமுனைப் பிரச்சா ரம் நடத்துவது என சிஐடியு திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங் கம் முடிவு செய்துள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை
கோபி, ஜன.16- சிறுவலூர் பகுதியில் ஒரே குடும் பத்தை சேர்ந்த நான்கு பேர் தென்னை மரத்து வண்டுகளை கட்டுப்படுத்தும் சல்பாஷ் மாத்திரைகளை அருந்தி தற் கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள சிறுவலூர் பகுதி சின்னமூப்பன் வீதியை சேர்ந்தவர் தனசேகர் (36), இவரது மனைவி பாலாமணி (29). இவர்களுக்கு வந்தனா (10) என்ற மக ளும், மோனீஸ் (7) என்ற மகனும் அப் பகுதியில் அரசுபள்ளியில் படித்து வந்த னர். இந்நிலையில் தனசேகர், பாலமணி இருவரும் தனியார் கார்மென்ட்ஸ் நிறு வனத்தில் வேலைக்கு சென்று வந்தனர். கடன் பிரச்சினை இருந்து வந்ததாக வும் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ள தால், தனசேகர் பாலாமணி தம்பியி னர் செவ்வாயன்று தென்னை மரத்தில் வண்டுகளை கட்டுப்படுத்தும் சல்பாஷ் மாத்திரைகளை அருந்தி விட்டு குழந்தைகள் இருவருக்கும் குளிர் பானத்தில் மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளனர். குளிர்பானத்தை குடித்த குழந்தை கள் கசப்பு காரணமாக வாந்தி எடுத்துள் ளனர். தனசேகரும் பாலாமணியும் உயிருக்கு போராடிக்கொண்டி ருந்த்தை கண்ட குழந்தைகள் இருவரும் கதறி அழுது கொண்டிருந்துள்ளனர். குழந்தைகளின் அழுகுரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது உயிருக்கு போரா டிக்கொண்டிருந்த நான்கு பேரையும் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தனசேகரும், பாலா மணியும் உயிரிழந்தனர். மேலும் மருத் துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் வந்தனாவும், மோனீஸ் புதனன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இச் சம்பவம் குறித்து சிறுவலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். கடன் தொல்லை காரணமாக கண வன் மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்ப வம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப டுத்தி உள்ளது.