districts

காவல் ஆணையத்தின் கலந்தாய்வுக் கூட்டம்

கோவை, செப்.12- மேற்கு மண்டல காவல்துறையில் மேற் கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணி கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை யிலான 5ஆவது காவல் ஆணையத்தின் கலந்தாய்வுக் கூட்டம் கோவை மாநகர காவல்  ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதி செல்வம் தலைமை யில், கலந்தாய்வுக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற  ஆட்சியர் அலாவுதீன் மற்றும் முன்னாள்  காவல் துறை தலைமை இயக்குநர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். இந்தக் கூட்டத்தில் காவல்துறையில் பணி நியமனம், ஊதியம், பணிகளுக்கான நெறிமுறை, மன அழுத்தம் ஆகியவை குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டது. இதில், 8 மாவட்ட ஆட்சியர்கள், மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கோவை அரசு மருத்துவமனை தலைவர் நிர்மலா, மருத்துவத்துறை அதிகாரிகள், உளவியல் ஆலோசகர்களும் இந்த ஆலோ சனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வு கூட்டத்தில். காவலர் -  பொதுமக்களுக்கு இடையேயான உறவை  மேம்படுத்தவது, காவல்துறை பணியாளர் களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்து வது, பணியிடங்கள், மற்றும் புதிய பயிற்சி முறைகளைப் பரிந்துரை செய்வது போன்ற ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.