districts

img

அடிப்படை வசதிகள் பெற அழைக்கழிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள்!

தருமபுரி, அக்.8- குறைதீர் கூட்டத்தில் அளிக்கப் படும் மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்காமல், மாற்றுத்திறனாளி களை அழைக்கழிக்கும் போக்கை  கைவிட வேண்டும் என மாற்றுத்திற னாளிகள் சங்கத்தினர் வலியுறுத்தி யுள்ளனர். மாற்றத்திறனாளிகளுக்கான கோட்ட அளவிளான குறைதீர் கூட் டம், தருமபுரி மாவட்டம், அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர்  தலைமை வகித்து, மாற்றுத்திறனா ளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொணடார். இதில் தமிழ் நாடு அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தமிழ்செல்வி, காந்தி, மனோகரன் மற்றும் காதுகேளாதோர் மற்றும்  வாய்பேசமுடியாதோர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் திருஞானம் ஆகியோர் பங்கேற்று கோரிக்கை களை குறித்து பேசினர். அப்போது, கடந்த 3 ஆண்டுகாலமாக கோட்ட  அளவில் மாதத்தின் இரண்டாம்  செய்வாய்க்கிழமை அன்று மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட் டம் நடைபெற்று வருகிறது. ஆனால், இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவ தில்லை. சில துறையை சார்ந்த அலு வலர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். மனுக்க ளின் மீது நடவடிக்கையும் இல்லை;  உரிய பதிலும் இல்லை. மேலும்,  மாற்றுத்திறனாளிகள் அழைக் கழிக்கப்படுகின்றனர். குறிப்பாக, அரூர் வட்டம், தீர்த்த மலையைச் சேர்ந்த மாற்றுத்திற னாளி மகேந்திரன் என்பவர், எவ் வித வருவாயுமின்றி அரசு வழங் கும் உதவித்தொகையை கொண்டு  வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவருடைய பழைய ஓட்டு வீடு  பழுதடைந்து மிக மோசமான நிலை யில், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் உள்ளார். எனவே, அரசு சார்பில் வீடு  கட்டித்தர வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தும், எவ் வித நடவடிக்கையும் இல்லை. அதேபோன்று, காட்டுபாடி கிராமத் தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகன், மனநிலை பாதிக்கப்பட்ட  மாற்றுத்திறனாளி சாந்தி ஆகியோர்  அரசு வீடு கேட்டு பலமுறை மனு  அளித்தும் எந்தவித நடவடிக்கை யும் இல்லை. அதேபோல் அரூர்  பேரூராட்சி, பாட்ஷா பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபானா அரசு வீடு கேட்டு அதிகாரிகளால் அழைக்கழிக்கப்பட்டு வருகிறார். இப்படி பல்வேறு கோரிக்கைகளுக் காக மனு அளிக்கப்பட்டு கோரிக்கை நிறைவேறாமல் நூற்றுக்கணக்கான மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள் ளதாக, மாற்றுத்திறனாளிகள் வேத னையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து மாற்றுத்திறனாளி கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி கூறுகையில், கடந்த  2023 ஆம் ஆண்டில் மாற்றுத்திறனா ளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, அரசு வீடு, நூறுநாள் வேலை,  அரசு உதவித்தொகை, கடனுதவி உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள் கேட்டு, 1887 மனுக்கள் அரசு அலு வலரிடம் வழங்கப்பட்டது. ஆனால்  எந்த மனுக்கள் மீதும் உரிய நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. நூறுநாள் வேலைத்திட்டத்தில் பல் வேறு ஊராட்சிகளில் மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.200 கூலி மட்டுமே வழங்கப்படுகிறது. ரூ.319 முழு  கூலியை வழங்க மறுக்கின்றனர்.  அதேபோல் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டையை, ஏஏஒய் அட்டை யாக மாற்ற மனு அளித்தும் நடவ டிக்கை இல்லை. 5 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில் அரூர்  உள்ளிட்ட அனைத்து பேரூராட்சிக ளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடைகள் வழங்க மறுத்து வருகின்ற னர். சுய தொழில் தொடங்க வங்கி  கடன் கேட்டு பல வங்கிகளில் கடன் வழங்க மறுத்து வருகின்றனர். புதியதாக கட்டப்பட்டு வரும் அரூர் பேருந்து நிலையத்தில் மாற் றுத்திறனாளிகளுக்கென ஆண்,  பெண் தனி கழிவறை சாய்தளத்து டன் அமைத்துத்தர வேண்டும். குறைதீர் கூட்டத்தில் கொடுக்கப் படும் மனுக்களுக்கு விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளை அழைக்கழிக்கும் நடைமுறையை கைவிடவில்லை யென்றால், அரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போரட்டம் நடைபெறும், என்றார்.