சேலம், ஜூன் 18- சேலம் தாரமங்கலத்தையடுத்துள்ள துட்டம்பட்டியில், பொதுமக்கள் சங்ககிரி சாலையில் குடிநீர் கேட்டு சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், தாரமங்கலம் அடுத்துள்ளது துட்டம் பட்டி பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்தில் ஆட்டையான் வட் டம், சேவி வட்டம்,கொடியான் வட்டம் உள்ளிட்ட ஏராள மான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பல ஆண்டு களாக கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தண்ணீர் பிரச்சனையால் பொதுமக்கள் கடுமை யான பாதிப்புகளை அடைந்து வந்த நிலையில், பொதுமக்கள் சங்ககிரி முக்கிய சாலையில் உள்ள துட்டம்பட்டி நெடுங் சாலையில் சுமார் காலி குடங்களுடன் பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். அப்போது, அந்த இடத்திற்கு தாரமங்கலம் காவல் துறை ஆய்வாளர் தொல்காப்பியன் தலைமையில் வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். சாலை மறியல் நடந்த இடத்திற்கு துட்டம்பட்டி பஞ்சாயத்து துணை தலைவர் சீனிவாசன் திடீ ரென வந்தார். அவரைப் பார்த்து ஆவேசமான பொதுமக்கள் சுற்றி வளைத்து சரமாரியான கேள்விகளை எழுப்பினர். இதனையடுத்து, சீனிவாசனை காவல்துறையினர் மீட்ட னர்.