திருப்பூர், ஜூலை 18 - தமிழ்நாட்டில் 70 வயது அடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 10 சத விகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங் கத்தினர் அரை நாள் தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பாக செவ்வாயன்று காலை நடைபெற்ற இந்த தொடர் முழக்கப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட் டத் தலைவர் க.சண்முகம் தலைமை ஏற் றார். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழி யர்கள், ஊராட்சி எழுத்தர்கள், வனத் துறையில் தொகுப்பூதியம் பெறுவோர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண் டும், மருத்துவ செலவின நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டத்தில் தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தைத் தொடக்கி வைத்து அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார் அகமது தொடக்க வுரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் சோ.பாலகிருஷ்ணன் கோரிக்கை களை விளக்கிப் பேசினார். ஓய்வு பெற்றோர் காவலர் நல அமைப்பு மாவட் டத் தலைவர் பி.பாலகிருஷ்ணன், பள்ளி கல்லூரி ஓய்வுபெற்ற ஆசிரியர் நலச் சங்க மாவட்டத் தலைவர் எம்.நாட்ரா யன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூ தியர்கள் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் போராட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார். மாவட்டப் பொரு ளாளர் கி.மேகவர்ணன் நன்றி கூறி னார்.