districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வழிப்பறி

கோவை, ஜூலை 25- பந்தையசாலை பகுதி யில் நடைபயிற்சி மேற் கொண்டிருந்த கல்லூரி பேராசிரியையிடம், 3 பவுன் நகையை பறித்து சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீசார் தேடி வரு கின்றனர். கோவை, பந்தைய சாலை பகுதியைச் சேர்ந்த வர் ராஜகுமாரி (53). இவர்  கோவை அரசு கலைக்கல் லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் திங்களன்று இரவு  நடைபயிற்சி மேற்கொண்டி ருந்தார். தாமஸ் பார்க் அருகே சென்றபோது அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரி யாத நபர், 3 பவுன் தங்க  செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடு பட்ட நபரை தேடி வருகின் றனர்.

தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம்

நாமக்கல், ஜூலை 25- தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.36.84 லட்சம் வழங்க வேண்டும் என நாமக்கல் நுகர்வோர்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கிறிஸ்டி  இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் டி.எஸ். குமாரசாமி. இவர் ரூ.75 லட்சத்துக்கு விலைக்கு வாங்கிய  காரை, கடந்த 2018 நவம்பரில் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவ னத்தில் ஆண்டு பிரிமியமாக ரூ.2,27,058 செலுத்தி காப்பீடு செய்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து திருச்செங்கோடு வந்து கொண்டிருந்தபோது, சேலம் அருகே  கடும் மழையால் காருக்குள் தண்ணீர் சென்று எஞ்சின் பழு தாகிவிட்டது. இதனை சரி செய்ய ஏற்பட்ட செலவு தொகை ரூ.29,68,491யை கேட்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் செலவு ரசீதுகளுடன் குமாரசாமி, மனு தாக்கல் செய்துள்ளார். அதற்கு, முந்தைய ஆண்டில் வேறு ஒரு இன்சூரன்ஸ் நிறுவ னத்தில் காப்பீடு பெற்றிருந்த போது, இழப்பீடு பெற்றதை தெரிவிக்காமல் தங்களிடம் காப்பீடு பெற்றுள்ளதால் காருக்கு பழுது நீக்க ஏற்பட்ட செலவு தொகையை தர முடியாது என இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துவிட்டது. இதனால் குமாரசாமி, கடந்த 2021 ஆம் ஆண்டில் நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிவுற்று நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிபதி வீ.ராமராஜ் வழங்கிய தீர்ப்பில், இன்சூரன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளருக்கு விபத்தால் ஏற்பட்ட செலவு தொகையை தர மறுத்தது சேவை குறைபாடு என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. வேறு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்து, அந்த நிறுவனத்தில் இழப்பீடு ஏதும் பெற்றிருந் தால் அதனை தெரிவிக்காமல், புதிய இன்சூரன்ஸ் நிறுவனத் தில் காப்பீடு பெற்றுவிட்டாலும் வாடிக்கையாளர் தெரிவித்த தகவல் உண்மையானதா? என்பதை இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் 21 நாட்களுக்குள் இணையதளத்தில் அல்லது முந் தைய நிறுவனத்தில் விசாரித்து உறுதி செய்ய வேண்டும். தவ றாக தகவல் கூறி போனஸ் பெற்றிருந்தால் அந்த தொகையை செலுத்துமாறு வாடிக்கையாளருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவிக்க வேண்டும்.

இந்த வழக்கில் பாலிசி முடிவதற்கு 18 நாட்களுக்கு முன்பே வேறு இன்சூரன்ஸ் நிறுவனத்திலி ருந்து மாற்றி தற்போதைய இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு பணம் செலுத்தி காரின் உரிமையாளர் காப்பீடு பெற்றுள் ளார். காருக்கு விபத்து ஏற்பட்ட பின்னர் காரின் உரிமையாளர் இன்சூரன்ஸ் செய்து பத்து மாதங்களுக்கு மேல் ஆகவும், இழப்பீடு பெற பிரிமிய தொகையில் பெற்ற 20 சதவிகித போனஸ் தொகை ரூ.39,381யை செலுத்த வேண்டும் என்று  ஏஜென்ட் கூறியதால், கடந்த நவம்பர் 2021 ஆம் ஆண்டில் அந்த  பணத்தையும் செலுத்தி உள்ளார். அதனையும் பெற்றுக் கொண்டு காப்பீட்டுத் தொகையை இன்சூரன்ஸ் மூலம் வழங்க மறுத்தது தவறு என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள் ளது. எனவே, வழக்கு தாக்கல் செய்தவருக்கு, அவரின் காரை சரி செய்ய செய்த செலவு தொகையிலிருந்து 20 சதவிகிதத்தை கழித்துக்கொண்டு, மீதத்தொகை ரூ.23,74,792 மற்றும் அதற்கு விபத்து ஏற்பட்ட நாளிலிருந்து தற்போது வரை 9 சத விகித வட்டி ரூ.8,10,000 மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் என மொத் தம் ரூ.36,84,792யை இன்சூரன்ஸ் நிறுவனம் நான்கு வார  காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நகை, பணம் கொள்ளை

கோவை, ஜூலை 24- கோவை, மசக்காளிபா ளையம், செங்குட்டை தெரு வைச் சேர்ந்தவர் சதாசிவம் (60). இவர், வீட்டை பூட்டி விட்டு, வெளியே சென்றார். அப்போது அங்கு வந்த அடை யாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் புகுந்து அலமாரி யில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 ஆயி ரத்தை கொள்ளையடித்து சென்றனர். வீடு திரும்பிய சதாசிவம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, நகை, பணம் கொள்ளை போனது கண்டு  அதிர்ச்சியடைந்தார். இதுகு றித்து சிங்காநல்லூர் போலீ சார் விசாரித்து வருகின்ற னர்.