ஈரோடு, ஜன. 31- பாபர் மசூதி இடித்தவர்க ளுக்கு பத்மபூசன் விருது வழங்கி யிருக்கிறார்கள் என அந்தியூரில் நடைபெற்ற சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மக்கள் ஒற்றுமை விழாவில் கே.சுப்பராயன் எம்பி பேசினார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், குந்துபாயூரில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் சார்பில் வியாழனன்று மக் கள் ஒற்றுமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஹாத்திம்தாய், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.பல்தேவ் சிங், பி.துரை ஜெய சீலன் ஆகியோர் தலைமை வகித் தனர். மாநில உதவித் தலைவர் ப.மாரிமுத்து துவக்க உரை யாற்றினார். திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், காந்தியடிகளை எதற்காக சுட்டுக் கொன்றார் கள்? இதன் உள்ளடக்கத்தை நாம் தெரிந்து கொண்டால்தான் நிகழ் கால சிக்கல்களின் ஆதிமூலம் எது? எது நெருக்கடிகளை தோற்று விக்கிறது என்று அறிய முடியும். நம்மை வணங்குகின்ற கைக்குள் கூட நம்மை கொல்லும் கருவி இருக்கக் கூடும். இதனை செய்து காட்டியவன் ஆர்எஸ்எஸ் காரன். மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என்ற அற்புத இயல்பு நம் மனதில் புதைந்திருக்கிறது. அந்த அற்புதத்தை கரையான் மரக்கட்டைகளை அரிப்பது போல் அரித்து உருக்குலைக்கி றது. யாதும் ஊரே, யாவரும் கேளிர். இந்த பூமி பந்தின் பிரபஞ் சம் முழுவதும் என் ஊர் தான். இரஞ்சி வருபவர்களுக்கு காத்தி ருந்து உணவு கொடுத்த மரபு தமிழ் மரபு. பசியற்ற, பிணியற்ற பிறரைக் கொல்லும் கொடுமை கொண்ட மனம் மனதில் தோன்றாமல் தடுக்கிற ஒரு உத்தம சமுதாயம் ஒன்றை 19 ஆம் நூற்றாண்டில் அறிவியல் சமுதாயம் கண்ட றிந்தது. அத்தகைய சமூகத்தை படைத்ததன் மூலம் சகல நெருக் கடிகளுக்கும் தீர்வு வரும் என்று விரிவாக விஞ்ஞான பூர்வமாக புரிய வைத்தவன் தான் உலகத் தின் மகாமேதை காரல்மார்க்ஸ். கடந்த 10 ஆண்டு காலம் இந்த மண் கண்டறியா கொடுங் கொலைகள் நடந்த காலம். காசாப்புக் கடையில் ஆடு அறுக் கக் கூட அனுமதி வேண்டும். ஆனால் குஜராத்தில் 2002 இல் நடந்த குரூரத்தை வரலாறு பதித்து வைத்திருக்கிறது. இன்றைக்கு நாடாளுமன்றத்தில் 35 சதவிகிதத் திற்கும் மேல் இருக்கிறார்கள். இவர்கள் குற்றப்பின்புலம் கொண்டவர்கள். அவர்களை மாண்புமிகு என்ற உயர்ந்த அந்தஸ் திற்கு எது உயர்த்தியது? சாதி, மதம் இனம் புரியாத வெறி. அதை ஏன் ஊட்டுகிறார்கள். வெறி பிடித் தால் தான் பெரும்பான்மை மதத்தை ஒன்று சேர்க்க முடியும். பத்மபூசன் விருது பாபர் மசூதி இடித்தவர்களுக்கு வழங்கியிருக் கிறார்கள். பேய் அரசு செய்தால் பிணம் திண்பது சாஸ்திரமாகிவி டும். அதுதான் நடக்கிறது. இந்த தேர்தலில் கூட 63 சத விகித இந்தியர்கள் பிஜேபியை நிராகரித்து விட்டார்கள். இது இந்தியா வகுப்பு வெறியர்க ளோடு இல்லை என்பதை அட்சர சுத்தமாகக் காட்டுகிறது. எனவே நீங்கள் நம்பிக்கையிழக்க வேண் டிய அவசியமில்லை. இதைப் புரிந்து கொண்டு வலிமையான ஒற்றுமையைக் கட்ட வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியில், வழக்கறி ஞர் மு.முகமது அலி ஜாலியா உறு திமொழி வாசித்தார். மாவட்டத் தலைவர் இஸாரத்தலி, பொருளா ளர் கே.நடராஜன், உதவிச் செயலா ளர் எம்.ஏ.முகமது நாசர் அலி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட் டத் தலைவர் பி.சாவித்திரி, பள்ளி வாசல் முத்தவல்லி கே.டி.ரஹ் மான், செயலாளர் சிராஜ்தீன், பேரூராட்சி முன்னாள் தலைவர் மகேந்திரகுமார் ஆகியோர் முன் னிலை வகித்தார். கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றி தழ்களும், கேடயங்களும் பரிச ளிக்கப்பட்டன. நிறைவாக ஏ.முக மதலி நன்றி கூறினார்.