உதகை, ஆக. 1– உதகை உள்ளாட்சி அமைப்புக ளில் உள்ள பேரிடர் மீட்பு உபகர ணங்கள் ஆய்வு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட் டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய் தது. கூடலுார், பந்தலுார் பகுதிக ளில் மழையால் மலை பயிர்கள், வீடு கள் சேதமானது. ஊட்டி, மஞ்சூர் பகு திகள் என, மாவட்ட முழுவதும் ஆங்காங்கே பெரிய அளவிலான மரங்கள் விழுந்து பாதிக்கப்பட்டது. நீலகிரிக்கு கன மழை பெய் யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ‘ரெட்’ அலர்ட் அறிவிக்கப்பட்டதால் மாவட்ட நிர்வா கம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற னர். அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழு சார்பில் 32 பேர் கொண்ட மீட்பு வீரர்கள் ஊட்டி வந்தடைந் தனர். மீட்புப் பணிகளுக்காக உபக ரணங்களுடன் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுக்கள் கூட லூர் மற்றும் குந்தா பகுதிகளுக்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள னர். அதேபோல், 4 நகராட்சி, 11 பேரூராட்சி மற்றும் 35 கிராம ஊராட்சி களில் பேரிடம் மீட்பு உபகரணங்கள் ஆய்வு செய்யப்பட்டு தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளது. சோலுார் பேரூராட்சியில், மீட்பு உபகர ணங்களை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முகமது ரிஷ்வான் ஆய்வு மேற்கொண்டு ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.