நாமக்கல், டிச.26- பரமத்திவேலூர், கரூர் நான்கு சாலையில் நிழற்குடை அமைத்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பேரூராட்சி, கரூர் நான்கு சாலை யில் பொதுமக்கள் பேருந்தில் ஏறி, இறங்க நிழற்கூடம் இல்லாமல், பல ஆண்டு காலமாக கடும் வெயிலிலும், மழையிலும் சிரமப்படுகின்றனர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரி வாக்கம் என்ற பெயரில் அங்கு அமைக் கப்பட்டிருந்த நிழற்கூடத்தை நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் அகற் றியதாக தெரிகிறது. ஆனால், தற்போது வரை நிழற்குடை அமைக்கவில்லை. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் பல முறை பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுக்கபட் டது. இந்நிலை யில்,அந்த இடத் தில் மீண்டும் நிழற்குடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் பி.குணசேகரன் தலைமையில் பொது மக்கள் சுமார் 200 பேரிடம் கையெ ழுத்து பெறும் இயக்கம் நடைபெற்றது. அதன்பின் கோரிக்கை மனுவுடன் பரமத்திவேலூர் பேரூராட்சி செயல் அலுவலரை நேரில் சந்தித்து, உடனடி யாக நிழற்குடை அமைக்க தர வேண் டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த இயக்கத்தில் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.தங்கமணி, வட்டக்குழு உறுப்பினர் பி.குணசே கரன் மற்றும் ஆர்.குமரேசன், கே.பொன் னுசாமி, மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.