திருப்பூர், நவ.3- நிறுத்தி வைக்கப்பட்ட ஊக்கத் தொகையை வழங்க அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பால் உற் பத்தியாளர்கள் சங்க திருப்பூர் மாவட் டத் தலைவர் எஸ்.கே.கொளந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் ஆவினுக்கு பால் வழங்கி வந்த விவசாயிகளுக்கு லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை கடந்த டிசம்பர் மாதம் முதல் தமி ழக அரசு வழங்கி வந்தது. இது பால் உற்பத்தியாளர்களுக்கு இடுபொருட் கள் விலை உயர்ந்த நிலையில், நிலை மையை சமாளிக்க ஓரளவு உதவி வந்தது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் முதல் ஊக்கத் தொகையை தமிழ்நாடு அரசு வழங்கவில்லை என் றுக்கூறி, ஆவின் நிர்வாகம் ஆரம்ப நிலை சங்கங்களுக்கு வழங்கி வந்த ஊக்கத் தொகையை நிறுத்திவிட் டது. இந்த நிலைமையில் விவசாயி கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தாக, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் திருப்பூர் மாவட்டக்குழு சார் பில் 19-9-2024 அன்று மாவட்ட ஆவின் மேலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து 10-10-24 அன்று ஊத்துக்குளி தாலுக்காவில் பால் உற்பத்தியாளர் சங்கம் சார் பில் கோரிக்கை ஆர்பாட்டம் நடை பெற்றது. கடந்த 25-10-24 இல் நடைபெற்ற திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இந்த பிரச்சனை குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் விரிவாக எடுத்துரைத்து அர சின் கவனத்திற்கு கொண்டு சென் றார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில மையமும், இது குறித்து அறிக்கை அளித்து மாநில அரசை வலியுறுத்தி இருந்தது. இதே போல இதர விவசாய சங்கங்களும் கோரிக்கை விடுத்து வந்தன. இந்நி லையில் அக்.29 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசின் கால்நடை மற்றும் பால்வளத் துறை சார்பில் வெளியிட் டுள்ள அரசாணையில் 140 கோடி ரூபாய் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகையை விடுவித்துள்ள னர். இந்த நடவடிக்கையை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம், தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் திருப்பூர் மாவட்டக்குழுக்கள் சார்பில் வரவேற் கின்றோம். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இடு பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்துள்ள நிலையில் பால் உற்பத்தியார்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 விலை உயர்த்தி வழங்கினால் தான் கட்டுபடியாகும். அதனையும் தமிழ்நாடு அரசு பரிசீ லித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட் டச் செயலாளர் ஆர்.குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.