திருப்பூர், ஜூலை 2- திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தி லிருந்து முருகம்பாளையத்திற்கு இயங்கி வந்த பேருந்துகள் தற்போது வருவதில்லை. எனவே உடனடியாக மீண்டும் பேருந்துகளை இயக்கக் கோரி மாதர் சங்கத்தினர் செவ்வா யன்று போக்குவரத்து மேலாளரிடம் மனு அளித்தனர். தமிழ்நாடு போக்குவரத்து கழக பணி மனை திருப்பூர் மேலாளரிடம் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் செவ்வா யன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கருவலூரில் இருந்து திருப்பூர் வரும் 12 ஆம் எண் பேருந்து ஆட்டையாம்பாளையம் பேருந்து நிறுத்தத்திற்கு முன்பே நிற்கிறது. கருமத்தம்பட்டியில் இருந்து திருப்பூர் வரும் 32 ஆம் எண் பேருந்து எதிர்புறம் நிற்கிறது. எனவே வேலாயுதம்பாளையம் ஊராட்சி மற் றும் செம்பியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் பேருந்துகளில் ஏறும் வகை யில் ஒரே இடத்தில் பேருந்துகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து முருகம்பாளையத் திற்கு இயங்கி வந்த 2, 2எ, 2பி, 5டி, 27 ஆம் எண் ஆகிய பேருந்துகள் தற்போது முருகம் பாளையத்திற்கு வருவதில்லை. எனவே நிறுத்தப்பட்ட இப்பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மாதர் சங்க மாவட்டச் செய லாளர் கே.சரஸ்வதி, துணைச் செயலாளர் செல்வி, முன்னாள் மாவட்டத் தலைவர் அங்கு லட்சுமி, அவிநாசி ஒன்றியக்குழு உறுப்பி னர் சண்முகவேணி, கிளை உறுப்பினர் எப்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.