districts

img

பிரதான குடிநீர் குழாய் உடைப்பு - சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

பொள்ளாச்சி, நவ.29-  பொள்ளாச்சி, பல்லடம் சாலையில் பிரதான குடிநீர் குழாய் உடைந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாவதை தடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அம்பராம்பாளையம் கூட் டுக்குடிநீர் திட்டத்தின் மூலம்  பொதுமக்களுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி பல்லடம் சாலை நந்தனார் காலனி முன்பு பிர தான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட் டர் குடிநீர் விரயமாகி சாலையில் வழிகிறது. இக்குடிநீர் குழாய் அடிக்கடி பழுதாவது வாடிக்கையாகி வருகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கும், குடிநீர் வடிகால் வாரியத்திடமும் பல முறை தெரிவித்தும் தற்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;