பொள்ளாச்சி, ஜன.21- சாகித்திய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் தேவிபாரதிக்கு பொள் ளாச்சி இலக்கிய வட்டத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தேவிபாரதிக்கு பாராட்டு விழா மற்றும் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 115 ஆவது இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி பொள்ளாச்சி அரிமா சங்க அரங்கில் நடைபெற் றது. இந்நிகழ்விற்கு அமைப்பின் தலைவர் க.அம்சபிரியா தலைமை வகித்தார். செயலாளர் இரா.பூபா லன் முன்னிலை வகித்தார். புன்னகை பூ ஜெயக்குமார் வரவேற்றார். சாகித் திய அகாதமி விருது பெற்ற “நீர்வ ழிப்படூஉம்” நூலின் ஆசிரியர் தேவி பாரதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், கவிஞர் சிற்பி பாலசுப்பிர மணியம் தலைமை உரையாற்றி னார். ஓய்வுபெற்ற காவல் துறை அதி காரி கவிஞர் சின்னுச்சாமி வாழ்த்து ரையாற்றினார். தமிழ் இலக்கிய வர லாற்றில் தேவிபாரதியின் விருது பெற்ற நாவலில் அமைந்துள்ள சிறப் பம்சங்கள், சொற்கட்டமைப்பு, சிறப் புகள் எடுத்துரைக்கப்பட்டது. கவிஞர் சுடர்விழி நாவலை அறிமுகப்படுத் திப் பேசினார். இவ்விழாவில் திரைப் பட இயக்குநர் பிருந்தாசாரதி, “நீர்வ ழிப்படூஉம்” நாவல் வாசித்தல் அனுப வங்களைப் பகிர்ந்து கொண்டதோடு, கவியரங்கில் கலந்து கொண்டு கவிதை வாசித்த கவிஞர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார். அரிமா ராதாகிருஷ்ணன், சேவலா யம் ஞானசேகர் ஆகியோர் எழுத்தா ளர் தேவிபாரதிக்கு பாராட்டு தெரி வித்து, பயனாடை வழங்கினர். இவ் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.