தருமபுரி ஆட்சியர் தகவல் தருமபுரி, செப்.17- தாட்கோ மூலம் கடன் பெற்ற பயனாளி கள் அசல் தொகையை முறையாக செலுத் தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என தருமபுரி ஆட்சியர் கி. சாந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. அதனடிப்படையில் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக்கழகம் மற்றும் தேசிய தூய் மைப் பணியாளர் நிதி (ம) வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின் கீழ் 1990-91 முதல் 2011-12 ஆண்டு வரை கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய தூய்மைப் பணியாளர் நிதி (ம) வளர்ச்சிக் கழகம் ஆகிய திட்டங்களில் பெற்ற கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட் டத்தில் கீழ் அசல் தொகையினை செலுத் தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலு வையில்லா சான்று தாட்கோ, மாவட்ட மேலா ளர்களால் வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்திட்டம் டிச.31 ஆம் தேதியன்று வரை செயல்படுத்தப்படும் எனவும், தாட்கோ, மாவட்ட மேலாளர்கள் மேற்படி தெரிவிக்கப் பட்டுள்ளபடி அசல் தொகையினை பயனாளி டமிருந்து வசூல் செய்ய விரைந்து நடவ டிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்:3, சாலை விநாயகர் கோவில் சாலை, விருப்பாட்சிப்புரம், தருமபுரி என்ற முகவரி யில் தொடர்பு கொள்ளலாம், என ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.