ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில், தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட் டணி சார்பில், திமுக வேட்பாளர் பிரகாஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில் குமார பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட குமாரபாளையம் நகரம், பல்லக்கா பாளையம் மற்றும் பள்ளிபாளையம் நக ரம் ஆகிய இடங்களில் தேர்தல் பணி மனை திறப்பு விழா நடைபெற்றது. வனத் துறை அமைச்சர் மதிவேந்தன், திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந் தில், வேட்பாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தனர். இதில் மதிமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக தமிழ் புலிகள், கொமதேக நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். இந்நிகழ்வில், நகர் மன்றத் தலைவர்கள் விஜய் கண்ணன், செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுரு கன், திமுக நகரச் செயலாளர் அ.குமார், ஒன்றியப் பொறுப்பாளர்கள் தளபதி செல் வம், இளங்கோ, நாச்சிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.