திருப்பூரில் புதன் கிழமை மாலை கன மழை பெய்தது. இந்த மழையில் அணைப்பாளையம் பகுதி வெள்ளக்காடாக மாறியது. வழக்கம் போல் அணைப்பாளையம் ரயில்வே பாலம் நுழைவுப் பகுதி தண்ணீரில் மூழ்கி வாகனப் போக்கு வரத்து தடைப்பட்டது. இப்பகுதி மக்கள் மழைக்காலங்களில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மழை மற்றும் கழிவு நீர் முழுமையாக வடிந்து செல்லும் வகையில் சரியான வடிகால் வசதியை ஏற்படுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.