கோவை, ஏப்.7- தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை களை அதிகரிக்கப்பட உள்ளதாக மாநில சுகா தாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன் சுக் மாண்டவியாவுடன் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய ஆலோசனை கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச் சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் கலந் துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
தமிழ் நாட்டில் கொரோனா பேரிடர் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்து கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 6050 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதில், அதிகமாக கேரளாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் 24 மணி நேரத்தில் 273 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்று வருகின்ற 10, 11 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கட்டமைப்புகளும் மோக் ட்ரில் நடத்தப்பட உள்ளது. பேரிடருக்கு தேவை யான படுக்கை வசதிகள் மருந்து கையிருப்பு, ஆக்சிஜன் இருப்பு ஆகியவை இதன் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளில் தற்போது இரண்டு சதவிகிதம் பேர் மட்டுமே பரிசோதனை செய் யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை ஒரு பாதிப்பு என்ற நிலையில், தற்போது தினம்தோறும் 10, 20 என்கின்ற அளவில் உள்ளது. எனவே, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை அதிகரிக்க ஒன்றிய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் 1000 படுக்கைகள் தயார் நிலையிலும், அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலை யில் உள்ளது. தமிழ்நாட்டில் 24,061 ஆக்சிஜன் கான்சண்டேட்டர்களும், 260 பிஎஸ்ஏ பிளாண்ட் டுகளும், 2067 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் சேமிப்பு அமைப்புகள் தயார் நிலையில் உள் ளது. எனவே ஆக்சிஜன், படுக்கைகள், மருந்து கையிருப்பு என அனைத்தும் முழுமையாக உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 4 ஆயிரம் பேர் வீதம் கொரோனா பரிசோதனை செய்யப்பட் டன. மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளுடன் வருபவர்களை பரி சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தி உள் ளோம். எனவே, முதலமைச்சரின் அறிவுறுத்த லின் பேரில் 4 ஆயிரம் பரிசோதனை என்பது கூடிய விரைவில் 11 ஆயிரம் பரிசோதனை வரை உயர்த்தப்படும். தற்போது ஏற்படு கின்ற பாதிப்புகள் பெரியளவில் அச்சப்பட தேவையில்லை என்றாலும், பாதுகாப்பாக இருக்க வேண்டும். இணை நோய் உள்ளவர் கள் தங்களை தற்காத்து கொள்ள பொது இடங்களில் முக கவசங்கள் அணிந்து கொள் ளுங்கள். தமிழ்நாட்டை விட 10 மடங்கு கேர ளாவில் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து மருத்துவ மனைகளில் பணியாற்றுபவர்களுக்கு முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறி விக்கப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல் அறிகுறி கள் இருப்பவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க கொள்ளுங்கள். தனிமைப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம். தமிழ்நாட்டில் இன்ஃபுளியன்சா காய்ச்சல் முகாம்கள் 52,568 நடத்தப்பட்டு, 21 லட்சத்து 5000க்கும் மேற்பட் டவர்கள் பயனடைந்துள்ளனர். அரசு தலைமை மருத்துவமனைகளில் இரவு நேரங் களில் மருத்துவர்கள் இல்லை என்றால் தெரி வியுங்கள் அதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்.
25, 26 ஆம் தேதிகளில் எம்.ஆர்.பி தேர்வு நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெற்ற வர்கள் காலிப்பணியிடங்களுக்கு நிய மிக்கப்படுவார்கள். நீட் தேர்வில் ஆளுநர் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ஆளுநர் இங்கிருந்து அனுப்பி இருக்கிறார். குடியரசுத் தலைவர், ஒன்றிய சுகாதாரத்துறை, உயர்கல்வித்துறை ஆகிய வற்றின் வாயிலாக தமிழ்நாட்டிற்கு ஒரு சில விளக்கங்கள் கேட்டு உள்ளார்கள். நாமும் அதற்கான விளக்கங்களை தொடர்ந்து அனுப்பி வருகிறோம். எனவே, இதில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கி றோம். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட் சியர் தலைமையில் மருத்துவர்கள், மருத் துவ பணியாளர்களை தேர்வு செய்யும் பணி கள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அநேகமாக 10, 15 நாட்களில் முடிந்து விடும். இதையடுத்து, முதலமைச்சர் 500க்கும் மேற் பட்ட மருத்துவமனைகளை திறந்து வைப் பார் என தெரிவித்தார். இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணை யர் மு.பிரதாப், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.