திருப்பூர் அருகே முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உள்ள ஹஸ்ரத் பிலால் பள்ளிவாசலில் ஞாயிறன்று மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வை.ஆனந்தன், தீக்கதிர் செய்தியாளர் வே.தூயவன் பங்கேற்று வாழ்த்தி பேசினர். இப்பள்ளிவாசலின் தலைவர் அப்துல் ரகுமான், ஹஜ்ரத் ஹாரூன் ரஷீத், சிறுபான்மை நலக்குழுவை சேர்ந்த ஜெயராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் எம் .மகேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மணி என்கிற முருகசாமி, உள்பட அனைத்து சமுதாய பிரதிநிதிகள் பங்கேற்று மத நல்லிணக்கத்தை பேணிப் பாதுகாப்பது குறித்து உறுதியேற்றனர்.