districts

img

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தேர்தல் கால வாக்குறுதிகள் பழைய ஓய்வூதிய திட்டம், ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் முறை வழங்க கோருதல் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஜாக்டோ-ஜியோ பேரமைப்பு சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகங்களில் அணைக்கட்டு, பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஆகிய ஆறு மையங்களில் மாலைநேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டி.டி.ஜோஷி, செ. நா. ஜனார்த்தனன், எம்.ஜெயகாந்தன், ஜி.சீனிவாசன், ஜோசப் அன்னையா, சகேயு சத்திய குமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.