districts

பட்டறை இருட்டில் பரிதவிக்கும் தங்கநகை தொழிலாளர்கள்…!

தங்கத்தின் விலை ஏறினாலும் கடைக்காரருக்குத்தான் லாபம்,  இறங்கினாலும் கடைக்காரருக் குத்தான் லாபம் என விளம்பரத் தில் லலிதா ஜூவல்லரி உரிமை யாளர் பேசுவதை கேட்டிருப் போம். தங்கநகை தொழிலில் நுகர்வோருக்கு லாபமில்லை, கொள்ளை லாபமும் கடைக் காரருக்கு என்பது அவரது விளம் பர பேச்சின் உள்ளடக்கம். நுகர்வோர்களின் மீதுதான் எவ்வளவு அக்கறை இந்த ஜூவல் லரி உரிமையாளர்களுக்கு என  நுகர்வோரை யோசிக்க வைத்து தங்களின் கடைப்பக்கம் இழுப் பதற்கான தந்திரம் என்பதை விபரம் அறிந்தவர்கள் உணர்ந்தே  உள்ளனர்.

 நுகர்வோர் மீது இவ்வளவு அக்கறையோடு இருக்கும் இந்த  ஜூவல்லரிகளும், தங்கநகை பட் டறைகளும், தங்க கட்டியை உருக்கி, அழகான ஆபரணங் களை உருவாக்கும் தங்கநகை தொழிலாளர்கள் குறித்தோ, அவர்களின் வாழ்க்கைப்பாடு  குறித்தோ யாரும் பேசுவதில்லை  என்பதே கொடுமையிலும் கொடுமை. உழைப்புச்சுரண் டலுக்கு ஆளாகி, சட்டச் சமூக பாது காப்பு ஏதுமின்றி கொத்தடிமை களைப்போல் நடத்தப்படு கிறார்கள் என்பதே நிதர்சனம். கோவை மாவட்டத்தில் தங்க நகை செய்யும் தொழிலில் சுமார்  200 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் 1 லட்சத் திற்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் வேலை செய்கின்றனர். இவர்கள் 12 மணி நேரம் வேலை  செய்ய வேண்டும். ஆனால், இவர் களின் ஊதியமோ 8 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே. பெண்களுக்கான ஊதியம் 6 ஆயிரம் ரூபாய் முதல்  9 ஆயிரம் ரூபாய்தான் வழங்கப் படுகிறது. அதிலும் பாகுபாடு  என்கிற நிலையே உள்ளதாக  தங்கநகை தொழிலாளர் சங்கத் தினர் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து, சிஐடியு  கோயம் புத்தூர் தங்கநகை தொழிலாளர் யூனியன் பொதுச்செயலாளர் பி. சந்திரன் கூறுகையில், நகைத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழி லாளர்களுக்கு எந்த சட்ட பாது காப்போ, சலுகைகளோ கிடை யாது. இஎஸ்ஐ, பிஎப் கூட கிடை யாது. வேலை செய்தால் சம்பளம்.  இல்லையென்றால் கிடையாது. வேலையும் நிரந்தரம் கிடையாது.  இதுதான் நகைத்தொழிலில் ஈடு பட்டுள்ள தொழிலாளர்களின் இன்றைய நிலை. இதன்காரண மாகவே, பாரம்பரியமாக தங்க நகை தொழிலில் ஈடுபட்டு வந்த பலர், இத்தொழிலை விட்டு விலகி  வேறு வேலைகளுக்கு சென்று விட்டனர். 

தற்போது, தங்க நகை தயாரிப்பு நிறுவனங்கள் குறைந்த கூலிக்கு வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்து பணியில் ஈடு படுத்தப்படுகின்றனர். குறிப்பாக மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டும் கோவை மாவட்டத்தில் 30 ஆயிரம் பேர் தங்க நகை தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மொழி தெரியாமல், தங்களது பிரச்சனைகளை வெளியில் சொல்ல முடியாமல் அவதிபடும் தொழிலாளர்களிடம் 100 ரூபாய்  வெற்று பத்திரத்தில் கையெ ழுத்தும், ஆதார்கார்டு உள் ளிட்ட அனைத்து அடையாள அட்டைகளையும் நிறுவனங்கள் வாங்கி வைத்துக் கொள்வதுதான் உச்சம்.  மேலும், இந்த தொழிலில் ஈடு பட்டுள்ள வடமாநிலத்தை சேர்ந்த  முதலாளிகள் கூட அந்த தொழிலா ளர்களை வஞ்சிப்பது கொடுமை யிலும் கொடுமை. நகை செய்யும்  போது 0.01 அளவேனும் தங்கம்  குறையும்.அதற்கான தொகையை தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்கின் றனர். குறையும் தங்கம் துக;ள களாக சேகரிக்கபடும். அவற் றையும் விற்று நிறுவனங்கள் பணமாக்கி விடும். ஆனால் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை திருப்பி அளிக்க மாட்டார்கள். சிலர் தங்கத்தை வாங்கி நகைகள் செய்து, நகைக் கடைகளுக்கு வழங்கினால், அந்த பணம் 6  மாதங்களுக்கு பிறகே வழங் கப்படுகின்றன. ஆனால் அவர்கள்  வாழ்வியல் வரி, தொழில்வரி, வாடகை, மின் கட்டணம் மற்றும்  ஜிஎஸ்டி செலுத்தியாக வேண்டும்.  வாங்கிய கடனுக்கும் வட்டி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்தெல்லாம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கவலை கொள்வதில்லை என் றார்.  எப்போதும் மங்காத தங் கத்தை ஆபரணமாக செய்யும்  தொழிலாளர்களின் வாழ்வு பட்ட றையின் இருட்டில் மங்கிக்கி டக்கிறது. வெளிச்சத்திற்கு கொண்டு வர ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என்பதே பல் லாயிரக்கணக்கான தங்க நகை  தொழிலாளர்களின் எதிர்பார்ப் பாக உள்ளது. -பி.ராமகிருஷ்ணன்