districts

img

நேதாஜி பாதையில் போராடிய காதர் மைதீன்

ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியைச் சேர்ந்தவர் காதர் மைதீன். அன்றைய காலத்தில் பியூசி படித்தவர். சுதந்திரப் போராட்டத்தில் காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரால் ஈர்க்கப்பட்டு புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரப்பன் தலைமையில் காதர் மைதீன் உட்பட ஏழு பேர் செயல்படுகின்றனர்.  நேதாஜி வழியில் சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக புளியம்பட்டி, கோபி குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க வைப்பதற்காக அணி திரட்டும் முயற்சியில் ஈடுபடுத்தி உள்ளனர். இதன் காரணமாக ஆங்கிலேய அரசாங்கம் இவர்களை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. ஆங்கிலேய காவலர்கள் இவர்களை கண்டும் பயப்படும் அளவிற்கு இவர்களின் நடவடிக்கை இருந்து வந்தது. இந்நிலையில் இவர் திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் பகுதியில் ஆங்கிலேய காவல்துறையால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இவருக்கு ஏழு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை முடிவடைந்த நிலையில்,  வெளியே சென்றதும் நேதாஜி வழியில் சுதந்திரத்திற்கான போராட்டத்தை வீரு கொண்டு தொடர வேண்டும் என சிறைச்சாலையில், திட்டம் தீட்டியுள்ளனர். சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்று  இவர்கள் வெளியே வரும்போது, நாடு விடுதலை பெற்றது.  இவருக்கு அரசாங்கத்தின் சார்பில் தியாகி பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி பூத உடலுக்கு போற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. இவர்களின் புளியம்பட்டி அருகில் காலப்போக்கில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் அருகில் சேவூரில்  குடியேறி விடுகின்றனர். இவர்களின் வாரிசுகள் பொதுவுடமை இயக்கத்திலும், காங்கிரஸ் கட்சியிலும் பணியாற்றி வருகின்றனர்.