கோவை, அக்.29- இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் கண் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு கோவை, புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியின் தேசிய மாணவர் படை அமைப்பு சார்பில் சனியன்று நடைபெற்றது. இதில் ஒன் கேடிட் - ஒன் விஷன் என்ற இலவச கண் பரிசோதனை முகாம் கோவை சங்கரா கண் மருத்துவ மையத் துடன் இணைந்து நடைபெற்றது. இம்முகாமுக்கு அருட் பணி ஞான பிரகாசம் தலைமை ஏற்றார். பள்ளியின் தலைமை யாசிரியை அமலோற்பவ மேரி உட்பட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில், கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில், 30 பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் ஜி.ஆல்பர்ட் அலெக்ஸ்சாணடர் முகாமுக்கான ஏற்பாடுகளை செய் திருந்தார்.