districts

img

தாயுடன் உறங்கும் குட்டியானை: காட்சிகள் வைரல்

கோவை, ஜன.3- வால்பாறை அருகே பாறையில் குட்டியானை தனது தாயுடன் படுத்து உறங்கும் காட்சிகள் இணை யத்தில் வைரலாகி வரு கிறது.  கோவை மாவட்டம் வால் பாறை அடுத்த மானாம் பள்ளி வனசரகத்திற்குட் பட்ட பன்னிமேடு எஸ்டேட் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, 13 காட்டு யானைகள் குட்டி யானை ஒன்று டன் சுற்றி திரிந்தது. வெகுநேரமாக சுற்றி திரிந்த யானைக்கூட்டம் அங்கிருந்து வனத் திற்குள் சென்று விட்டது. ஆனால் குட்டி யானை யானை கூட்டத்தில் இருந்து பிரிந்து,  அந்த பகுதியில் உள்ள சாலையில் தனியாக  சுற்றி திரிந்தது. இதை பார்த்த பொது மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் மானாம் பள்ளி வனசரகர் மணிகண்டன் தலைமையி லான வனத்துறையினர், விரைந்து வந்து குட்டியானையை மீட்டனர். அதனை தொடர்ந்து, குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் பணியை தொடங்கினர். அப்போது யானைகள் பன்னி மேடு பகுதியில் இருந்து 4 கி.மீ தூரத்தில் இருப்பது தெரியவரவே குட்டியானையை அங்கு அழைத்து சென்று சேர்த்து விட்ட னர். இதையடுத்து, வனத்துறையினர் தொடர்ந்து யானை கூட்டத்தை கண்கா ணித்து வருகின்றனர். டிரோன் கேமரா மற்றும்  கண்காணிப்பு கேமரா மூலம் யானைகளை கண்காணிக்கின்றனர். அப்போது தோணி மூடி எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு அருகே உள்ள பாறையில் குட்டி யானை தனது தாயுடன் படுத்து உறங் கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த  காட்சிகளை தற்போது சமூக வலைத்த ளத்தில் வைரலாகி வருகிறது.