ஈரோடு, ஆக.17- அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்பிட வேண்டும் என அரசு ஊழியர் சங்க பேரவை வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், ஈரோடு மாவட்ட நம்பியூர் வட்டக் கிளையின் 3ஆவது பேரவைக் கூட்டம் தலைவர் எம்.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணைச்செயலாளர் பழனிச்சாமி தொடக்க உரை யாற்றினார். செயலாளர் கருப்புசாமி, பொருளாளர் சண்முகம் ஆகியோர் அறிக்கையை சமர்பித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராக்கிமுத்து, செயலாளர் ச.விஜயமனோ கரன் உள்ளிட்டோர் வாழ்த்தி உரையாற்றினர். இதில், புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், நம்பியூர் வட்டத்தில் தலைமை மருத்துவமனை, கருவூலத்துறை வட்டத்திற்கு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பேரவை யில், தலைவராக எம்.மகாலிங்கம், செயலாளராக ரா. கருப்புச்சாமி, பொருளாளராக எஸ்.சண்முகன் உள்ளிட் டோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், ரஹமத்துல்லா நன்றி கூறினார்.