பாலியல் வன்கொடுமை போக்சோவில் தந்தை கைது
கோவை, அக்.13- கோவையில் 2 பெண் குழந்தைகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய் தனர். கோவை மாநகரத்தை சேர்ந்த 36 வயது நபருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமண மான சில மாதங்களிலேயே அவரது மனைவி பிரிந்து சென் றார். பின்னர் 2ஆவதாக வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 14 வயது மற்றும் 10 வயதில் என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9 மற்றும் 5ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டாக அவரது 2 மகள்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தாக கூறப்படு கிறது. இதனை வெளியே கூறினால் மாணவிகளின் தாய் மற்றும் 2 பேரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில், மாணவிகள் படிக்கும் பள்ளியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட குழந்தைகள் நல அமைப்பு சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக் கப்படும் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத் தப்பட்டது. அப்போது குழந்தைகள் நல அமைப்பினர் மாணவி களிடம், யாராவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத் தால் தைரியமாக புகார் அளிக்கலாம் என்று தெரிவித்தனர். அப்போது மாணவிகள் இருவரும், தங்களது தந்தை கடந்த ஒரு ஆண்டாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய் வதாக புகார் அளித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தைகள் நல அமைப்பினர் இதுகுறித்து மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாணவிகளின் தந்தையை கைது செய்தனர்.
கலை நிகழ்ச்சியின்போது மாணவியின் முகத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு
உதகை, அக்.13- குன்னூரில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்ற நவ ராத்திரி விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியின் முகத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அபாயகர மான விளையாட்டை அனுபவமில்லாத மாணவிகளை செய் யச் சொல்லியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் எடப்பள்ளி கிராமத்தில் சித்தகிரி சாய் தர்மக்ஷேத்ரா கோவிலில் நவராத்திரி மகா உற்சவ் விழா வெள்ளியன்று துவங்கியது. இந்த நிகழ்ச்சியில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பரத நாட்டியம், கதகளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றது. அப்போது கலை நிகழ்ச்சியில் ஈடுபட்ட மாணவி ஒருவர் வாயில் மண்ணென்னை ஊன்றிக்கொண்டு தீயை ஊத முயன்றார். அப்போது தீ திடீரென மாணவியின் முகம் மற்றும் வாய் பகுதியில் பற்றியது. இதனால் நிலை குலைந்து மாணவி துடித்தார். உடனடியாக அருகே இருந்தவர்கள் தீயை அனைக்க முயன்றனர். தீயை அனைத்து காயங்க ளுடன் உடனடியாக மாணவியை மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற ஆபத்தான சாகச நிகழ்ச்சி நடத்த முறை யான பயிற்சி தேவை என்கிற நிலையில், எவ்வித அனு பமும் இல்லாத மாணவிகளிடம் இதுபோன்ற சாகச நிகழ்ச்சிகளை நடத்த அனுமதித்தது எப்படி என்றும், இந்நிகழ் வின்போது ஏராளமான மாணவிகள் கலைநிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனர். வேறு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டிருந்தால் யார் பொருப்பேற்பது என்கிற விவாதமும் எழுந்துள்ளது. எனவே, காவல்துறையினர் முறையான விசாரணை நடத்தி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பள்ளி நிர்வாகம் உள்ளிட் டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
பெண்ணிற்கு பாலியல் தொல்லை
கோவை, அக். 13- கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவை, ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். ஐடி ஊழியர். இவர் வியாழனன்று ராமநாதபுரம், காமராஜர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த இளைஞர் திடீரென இளம்பெண்ணை தொட்டு பாலியல் தொல்லை செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த சிலர் அந்த இளைஞரை பிடித்து ராமநாத புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், காந்திபுரம் 4வது வீதியை சேர்ந்த ஓட்டுநர் சுரேஷ்குமார் (29) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
பேருந்தின் மீது கல்வீசி தாக்குதல் – மூவர் கைது
மேட்டுப்பாளையம், அக்.13- காரமடையில், தனியார் பேருந்தின் மீது கல் வீசி தாக்கி கண்ணாடியை உடைத்த வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேட்டுப்பாளையத்தில் அடுத்துள்ள கார மடை பகுதியில் வியாழனன்று எஸ்.ஏ.டி. என்னும் தனியார் பேருந்து டீச்சர்ஸ் காலனி அருகே வந்து கொண்டிருக்கும்போது பேருந்து கண்ணாடியை அடையாளம் தெரி யாத நபர்கள் சிலர் கல் வீசி தாக்கி கண் ணாடியை உடைத்தனர். இது குறித்து பேருந்தின் ஓட்டுநர் மாதேஷ் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கார மடை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பேருந்தின் கண்ணாடியை உடைத்த நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், பேருந்து கண்ணாடி உடைத்த வழக்கில் கார மடை மங்களக்கரைபுதூர் பகுதியை சேர்ந்த கோபிநாத், பிரதீப் குமார், அருண்குமார் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் கடந்த 12 ஆம் தேதி இரவு 12:30 மணிக்கு காரமடை அருகே உள்ள டீச்சர்ஸ் காலனி அருகே பேருந்தை கைகாட்டி நிறுத்திய போது நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரம் அடைந்து பேருந்தை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று கண்ணாடியை உடைத்ததாக ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து 3 பேரையும் காரமடை காவல்துறையினர் கைது செய்து மேட்டுப் பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு நேர்நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
சாம்பாரில் மிதந்த எலி: வீடியோ வைரல்
உதகை, அக்.13- உதகையில் இயங்கி வரும் அம்மாஸ் கிச்சன் என்ற பிரபல தனியார் உணவகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கிய சாம் பாரில் குட்டி எலி மிதந்துள்ளது. இதுதொடர் பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் அம்மாஸ் கிச்சன் என்ற தனியார் உண வகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியில் இருந்து உதகைக்கு வந்த சுற் றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் இந்த தனியார் உணவகத்திற்கு வெள்ளி யன்று உணவருந்த சென்றுள்ளனர். அப்போது சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் இறந்த நிலையில், குட்டிஎலி மிதந்ததை கண்டு அதிர்ச்சிய டைந்தனர். இது குறித்து உணவக மேலா ளரிடம் கேட்டபோது, அஜாக்கிரதையாக பதில் அளித்ததால் சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரை வீடியோ மூலம் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், சர்வதேச சுற்றுலா தல மாக திகழக்கூடிய நீலகிரி மாவட்டத்தில் இது போன்ற அஜாக்கிரதையாகவும், காலாவதி யான உணவுகள் விற்கப்படும் உணவாக உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந் துள்ளது.
உயிர்பலி: ஊருக்கு ஒதுக்குபுறமாக பட்டாசு கடை அமைக்க வலியுறுத்தல்
தருமபுரி, அக்.13- பட்டாசு விபத்துக்களால் உயிர் பலியாவதை தவிர்க்க நக ரத்திற்கு ஒதுக்குபுறமாக பட்டாசு கடை அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகரம், பாலக்கோடு, அரூர், பென்னாகரம் பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான துணிக்கடை, நகைக்கடை, வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் லட்சகணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இப்பகுதி களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை அமைப்பதால், சிறு தீ விபத்து ஏற்பட்டாலும் பெருமளவிலான மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, நகரின் மைய பகுதி மற்றும் மக்கள் நெருக்கடியான பகுதிகளில் பட்டாசு கடை அமைப் பதை தடுத்து, யாருக்கும் பாதிப்பு இல்லாமல் நகருக்கு ஒதுக்குபுறமாக பட்டாசு கடை அமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சொந்த வாகனங்களை வாடகைக்குவிட எதிர்ப்பு
வாடகை வாகன ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்
நாமக்கல், அக்.13- சொந்த வாகனங்களை வாடகைக்கு விடு வதை தடுக்கக்கோரி வாடகை வாகன ஓட்டு நர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் அடை யாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. தமிழ்நாடு சுற்றுலா வாடகை வாகனங்க ளின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பி னர் சார்பில், தமிழகம் முழுவதும் மாநிலம் தழு விய அளவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த போராட் டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், வெப் படை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் தங் கள் வாகனத்தை இயக்காமல் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டனர். சொந்த பயன்பாட்டு வாகனங்களை பொதுமக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக் கும் வாடகைக்கு இயக்குவதை முழுமை யாக தடை செய்ய வேண்டும். ஒவ்வொரு வட் டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் தனிப் படை அமைத்து அந்தந்த பகுதியில் உள்ள சுற்றுலா வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் உதவியோடு வாட கைக்கு இயக்கும் சொந்த பயன்பாட்டு வாக னங்களை கண்டறிந்து பறிமுதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, இந்த வேலை நிறுத்த போராட்டம் நடை பெற்றது. மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக் கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடு பட்டதாக, வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினர் தெரிவித்த னர்.
6 மாதங்களில் ரூ.165 கோடி வருவாய் ஈட்டிய சேலம் ரயில்வே கோட்டம்
சேலம், அக்.13- கடந்த 6 மாதங்களில் சேலம் ரயில்வே கோட்டம் ரூ.165 கோடி வருவாய் ஈட்டி நிலையில், இது கடந்தாண்டை விட அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்டம் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான முதல் அரையாண்டில் 14.5 லட்சம் டன் சரக்கு களை கையாண்டு ரூ.156.16 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே கால கட்டத்தில் ரூ.138.05 கோடி வருவாய் ஈட்டியது. இது முந்தைய ஆண்டின் வருவாயை விட சுமார் 13.12 சதவிகித வளர்ச்சி ஆகும். சரக்குகளை பொறுத்தவரை இருகூரில் இருந்து பெட்ரோ லிய பொருட்கள் 9.5 லட்சம் டன்களை கையாண்டு ரூ.114.88 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. 2 லட்சம் டன் சிமெண்டு சரக்கு கையாண்டு ரூ.10.77 கோடியும், 57 ஆயிரம் டன் இரும்பு மற்றும் ஸ்டீல் உற்பத்தி பொருட்களை கையாண்டு முறையே ரூ.6.94 கோடி வருவாய் ஈட்டப்பட் டது. கரூர் அருகே வீரராக்கியம், பாளையம் பகுதியிலும், சங்க கிரி பகுதியில் இருந்தும் சரக்குகள் ஏற்றப்பட்டன. இரும்பு மற்றும் ஸ்டீல் பொருட்கள் மேச்சேரியில் இருந்து ஏற்றப் பட்டன. அதேபோல பார்சல் சேவையைப் பொறுத்தவரை ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் 2,21,590 குவிண் டாலை கையாண்டு ரூ.9.48 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில் காய்கறிகள் மற்றும் பழங்கள் மற்றும் பொறியியல் பொருட்கள் கோவையில் இருந்து ஏற்றப்பட்டு புதுதில்லி, கவு காத்தி போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டன. திருப்பூரி லிருந்து மும்பை, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களுக்கு ஆடைகள் கொண்டு செல்லப்பட்டன. மேலும், ஈரோட்டிலிருந்து பார்சல் வேன்கள் மூலம் பாட்னா, மால்டா, கவுகாத்தி போன்ற பகுதிகளுக்கு மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டன. இவை தவிர சேலம் மற்றும் கரூரில் இருந்தும் பல்வேறு பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட தாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.