districts

கால்நடைகளுக்கு ஆபத்தாக மாறிய தீவனம்

திருப்பூர், டிச.28- கிரிஷி நிறுவனத்தின் மாட்டுத் தீவனத்தை உண்ட 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது தொடர் பாக புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது  கண்டிடனத்துக்குரியது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி னர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிரிஷி நியூட்ரி சன் கம்பெனி பிரைவேட் லிமிடெட்  என்கிற நிறுவனம் கால்நடைக ளுக்குக் கலப்பு தீவனங்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து  வருகிறது. இந்நிறுவனத்தின்  கிரிஷி பைபாஸ் ப்ளஸ் என்ற தீவ னத்தை உடுமலை வட்டம், தேவ னூர் புதூர், பொன்னேரி பகுதி யைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாடுகளுக்கும், தாராபுரம் தாலுகா பொன்னிவாடி கிராமத்தில் உள்ள 60 மாடுகளுக்கும் விவசாயிகள் கொடுத்துள்ளனர்.  இத்தீவனத்தை உண்ட மாடு களுக்கு வயிற்றுப்போக்கு, இரத் தக்கழிச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் குடிக்க முடியா மல் சில மாடுகள் உயிரிழக்கும்  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கறவை மாடுகளின் பால் உற்பத் தியும்  பாதிக்கப்பட்டு, விவசாயிக ளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள் ளது.  இதுகுறித்து தாராபுரம் தாலுகா  கால்நடைத்துறை உதவி இயக்கு நரிடமும், மாவட்ட ஆட்சியருக்கு  வாட்ஸ் ஆப் மூலமும், விவசாயி கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக் கவில்லை. தமிழகத்தில் பல மாவட் டங்களில் இத்தீவனத்தால் கால்ந டைகள் பாதிப்பு அடைந்துள்ளன. கோவை மாவட்டம் தேக்கம்பட்டி யில் மூன்று ஆடுகள் இறந்து விட்ட தாக செய்திகள் வந்துள்ளன. மாவட்ட நிர்வாகமும், கால்நடைத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலை  அளிக்கிறது. எனவே, விவசாயி களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கிய இந்நிறுவனத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க  வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப் பீட்டை மாவட்ட நிர்வாகம் பெற்று தர வேண்டும் என தெரிவித்துள் ளார்.