districts

img

திருப்பூரில் பொறியாளர்கள் தின விழா

திருப்பூர், செப். 15 - திருப்பூர் சிவில் இன்ஜினியர்கள் சங்கத்தின் சார்பில்  பொறியாளர்கள் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப் பட்டது. பாரத ரத்னா விருது பெற்ற பொறியாளர் மோஷ்குண்டம் சர் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாள் ஆண்டுதோறும் பொறியாளர்கள் தின விழாவாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி திருப்பூர் சிவில் இன்ஜினியர்கள் சங்கத்தின் சார் பில் பொறியாளர்கள் தின விழா, அவர்களது சங்க அலுவல கத்தில் கொண்டாடப்பட்டது. முன்னாள் மாநில தலைவர்  கே.ராகவன் கொடியேற்றி வைத்து, விழாவை தொடங்கி வைத்தார். விழாவுக்கு சங்க தலைவர் சௌ.ஸ்டாலின்பாரதி தலைமை ஏற்றார். செயலாளர் கே.ராதாகிருஷ்ணன் வர வேற்க, செயற்குழு உறுப்பினர் ஏ.இளங்கோ உறுதிமொழி  வாசித்தார். இவ்விழாவையொட்டி விஸ்வேஸ்வரய்யா படத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  பின்னர் பொறியாளர்களுக்கான கிரிக்கெட், கேரம், சது ரங்கம் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடை பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தலை வர்கள் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். முடிவில் துணை செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

;