districts

img

அரசு திட்டங்கள் செயல்படுத்தும்போது முறையாக நிதிகள் சென்று சேர்வதை உறுதிபடுத்த வேண்டும்

திருப்பூர், டிச.28- ஒன்றிய, மாநில அரசுகளின் திட் டங்களை செயல்படுத்தும்போது அவை மக்கள் பிரதிநிதிகளால் கண் காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு முறையான நிதிகள் சென்று சேர் வதை உறுதிபடுத்த வேண்டும் என வியாழனன்று நடைபெற்ற வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்கூட்டம் வலியுறுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் வியாழனன்று நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்ப ராயன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டத் தில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ், மேயர் ந.தினேஷ்குமார், மாநக ராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் ஆகியோர் பங்கேற் றனர்.  மாவட்ட வளர்ச்சி, ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்புக்கு ழுவின் நோக்கம் ஒன்றிய, மாநில  அரசுகளின் திட்டங்களை செயல்ப டுத்தும்போது அவை மக்கள் பிர திநிதிகளால் கண்காணிப்பிற்கு உட்ப டுத்தப்பட்டு முறையான நிதிகள் சென்று சேர்வதையும், அதன் பணிக ளில் விரைவு படுத்த வேண்டும் என்ற  நோக்கத்தில் இக்கூட்டம் நடத்தப்பட் டது. மேலும், திட்டங்கள் சார்ந்த பணி கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு அது தொடர்பான ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக,  மாநகராட்சி, நகராட்சிகள், பேரூ ராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு வரப்பெற்றுள்ள ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி அதில் கால தாமதம் ஏற்படாத வண்ணம் நடவ டிக்கைகள் குறித்தும், திட்டப்பணி களை மேற்கொள்ளும் போது பணிக ளுக்கு இடையூறு ஏற்படுமனால் அவற்றை உடனடியாக சரி செய்து  தீர்வு கண்டு பணிகளை விரைந்து  முடிப்பது தொடர்பாகவும் ஆலோச னைகள் மேற்கொள்ளப்ட்டது. மேலும், நகர்புற வளர்ச்சித்துறை, நக ராட்சி நிர்வாகத்துறை, பேரூராட்சி கள்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, வருவாய்த்துறை, நில அளவைத்துறை, பள்ளிக்கல் வித்துறை, கனிம வளத்துறை,

தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மான கழகம் மின்வாரியம், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்ப யிர்கள் துறை, மாவட்ட தொழில் மையம், ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை, பொதுப்ப ணித்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தாட்கோ, வீட்டு வசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித்துறை, சமூகப்பாது காப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக் கள் நல்வாழ்வுத்துறை, தொழிலாளர்  நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைக ளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் மிஷன், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தேசிய சமூக நலத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத்திட்டம், பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட் டம், தேசிய நிலப்பதிவேடுகள் நவீன  மயமாக்கும் திட்டம் உள்ளிட்ட பல் வேறு திட்டங்கள் குறித்தும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்ட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட வரு வாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் திட்ட இயக்குநர் லட்சுமணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.