districts

கல்குவாரி குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்க வலியுறுத்தல்

திருப்பூர், ஆக.20 - திருப்பூர் மாவட்டம், காங் கேயம் வட்டம் சிவன்மலை அருகே  குட்டப்பாளையம் கிராமத்தில் அமைய இருக்கும் கல்குவாரி குறித்து நடைபெறும் கருத்துக் கேட்பு கூட்டத்தில் மாவட்ட ஆட் சியர் பங்கேற்குமாறு சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டத்தில் கல் குவாரி களுக்காக, கடந்த காலங்களில்  நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டங் களில், கருத்தை தெரிவித்து பேசும்  பொது மக்களுக்கும், சமூக செயற் பாட்டாளர்களுக்கும், சட்ட விரோத  கல்குவாரி உரிமையாளர்கள்  மற்றும் அவரது அடியாட்களால்  தொடர்ந்து கூட்டத்திலேயே  கொலை மிரட்டலும், அச்சுறுத் தலும் விடுத்திருக்கின்றனர். கடந்தாண்டில் 2 ரிக்டர் அளவில்  3 முறை நில அதிர்வை தொடர்ந்து  சிவன்மலை மற்றும் மறவ பாளையம்,  நால்ரோடு பகுதிகளில் சட்ட விரோத கல் குவாரிகளுக்கு எதிராக தொடர் போராட்டம்  நடைபெற்றது. இந்த  பகுதிக்கு அருகில் குட்டப்பாளையம் கிரா மத்தில் புல எண்: 46ல் 4.97 ஹெக் டேர் (சுமார் 12 ஏக்கர்) பரப்ப ளவில் அமைய இருக்கும் ஆர்.பி.பி  கல்குவாரி தொடர்பாக பொது மக்களின் கருத்தை நேரடியாக அறியும் வகையில், ஆக.22 தேதி யன்று நத்தக் காடையூர் - பழைய கோட்டை சந்தோஷ் மகால் திரு மண மண்டபத்தில் கருத்துக் கேட்பு  கூட்டம் நடைபெற உள்ளது. கல்குவாரியின் அனுமதி கேட் கும் புலத்தின், வெளிமுனைப் பகுதி யில் இருந்துதான் தூர அளவீடு செய்ய வேண்டும் என அரசின் சட்டம் இருக்க, சட்டவிரோதமாக குவாரியின் மையப்பகுதியில் இருந்து அளவீடு செய்து, உண் மைகளை மறைத்து அதிகாரிகளின்  துணையோடு போலி ஆவணங் கள் தயாரித்து அதன் அடிப்படை யில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்க உள்ளது.

முத்தூர் - குட்டப்பாளையம் ஆர்.பி.பி. கல் குவாரிக்காக நடை பெறும் கருத்துக் கேட்பு கூட்டத் தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேரடியாக பங்கேற்க வேண்டும். நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டம் உட்பட பல மாவட் டங்களில் நடைபெறும் அனைத்து கருத்துக் கேட்பு கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக பங் கேற்கின்றனர். திருப்பூர் மாவட் டத்தில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் அனைத்து கருத்துக் கேட்பு கூட்டத்தில் நேரடியாக பங் கேற்று பொதுமக்கள் அனைவரின் கருத்தையும் அறிந்தார். ஆனால், காங்கேயம் வட்டத் தில், கடந்த மாதம் நடந்த கீரனூர்  சசிக்குமார் கல்குவாரி கருத்துக்  கேட்பு கூட்டத்திலும், கடந்த  ஆக.16 ஆம் தேதியன்று நடந்த சிவன்மலை  கிரானைட் கல் குவாரி கருத்துக் கேட்பு கூட்டத்திலும், மாவட்ட ஆட் சியர் பங்கேற்கவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் 300க் கும் மேற்பட்ட குவாரிகளில் இருந்து எண்ணற்ற பாதிப்புகள் ஏற் பட்டு வரும் நிலையில், மாவட்ட  ஆட்சியர் நேரடியாக பங்கேற்கும்  போதே அனைத்து உண்மைகளை யும் உணர முடியும்.

கடந்த சில மாதம் முன்பு மார்ச்  10ஆம் தேதியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில்  நடைபெற்ற, கோடங்கிபாளையம் 5 கல் குவாரிக்கான கருத்து கேட்புக்  கூட்டத்தில், அரசு விதிப்படி  கல் குவாரி அமைய இருக்கும் புலத் திலிருந்து 300 மீட்டர் தூரத்திற் குள் அங்கீகரிக்கப்பட்ட 50 வீடுகள்,  6 கோவில்கள், அரசு சமுதாயக் கூடம், அரசு மேல்நிலை நீர் தேக்க  தொட்டி, 50 மீட்டர் தூரத்திற்குள்  ஓடை, மின்சார லைன்,  பெட்ரோ லிய லைன் ஆகியவை இருப்பதை மறைத்து கல்குவாரிக்கு அனுமதி பெற முயற்சி செய்ததை சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக் கத்தினர் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினர். அப்போது, சட்டவிரோத கல்குவாரி உரிமையாளர்களும், அவர்களால் அழைத்து வரப்பட்ட அடியாட்களும் கூச்சல் இட்டு ரகளை செய்து பேச விடாமல் அடா வடித்தனமாக தடுத்து ரகளை செய்தனர். அப்போது, கருத்து கேட்பு கூட்டத்தின் தலைவரும், மாவட்ட நிர்வாக நீதிபதியும், திருப்பூர் மாவட்ட ஆட்சியருமான வினீத்,  அமைதியாக இருக்க பலமுறை  வலியுறுத்தியும், தொடர்ந்து ரகளை  செய்ததால், கோடங்கிபாளையம் 5 கல் குவாரிக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்து அறிவித்தார். மேலும், ரகளை செய்து கொலை மிரட்டல் விடுத் தவர்கள் மீது கிரிமினல் வழங்கும் தொடரப்பட்டது. அன்றைய மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை வரவேற்புக்குரியது. 

சட்டவிரோத கல்குவாரி உரி மையாளர்களும், அவர்களால் அழைத்து வரப்பட்ட அடியாட் களும் அன்று மட்டுமல்ல, கடந்த  சில மாதம் முன்பு கோடங்கி பாளையம் கவிதா கல்குவாரி கருத்து கேட்புக் கூட்டத்திலும், பல் வேறு உண்மையான தகவல் களை பேசுபவர்களை இதே போல தொடர்ந்து பேச விடாமல் தடுத்து ரகளை செய்ததை கட்டுப் படுத்தி, கருத்து கேட்புக் கூட்டத்தை  அன்றைய மாவட்ட ஆட்சியர் நடத்தினார். இந்நிலையில், தொடர்ந்து சட்ட விரோத கல் குவாரிகளால் பாதிக்கப்பட்டு, பல்வேறு போராட் டத்தை நடத்தி வரும் சிவன்மலை மற்றும் மறவபாளையம், நால் ரோடு கிராமத்திற்கு அருகில்,  நொய்யல் ஆற்றின் கரையில்  மீண்டும் ஆர்.பி.பி கல்குவாரிக் கான கருத்து கேட்புக் கூட்டம் செவ் வாயன்று அன்று நடைபெற உள்ளது. சிவன்மலை கிராமத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கும் கல் குவாரிக்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங் கேற்று கருத்துச் சொல்லும் ஜன நாயக உரிமை, அந்த கிராமத்தைச்  சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகன்கள் அனை வருக்கும் உண்டு.  எனவே, அமைச்சர் மு.பெ.சாமி நாதன் சொந்த ஊரான முத்தூரை ஒட்டியுள்ள குட்டப்பாளையம் கிராமத்தில், முத்தூர்- குட்டப் பாளையம் கிராம ஆர்பிபி நிறுவன  கல் குவாரி கருத்துக் கேட்பு கூட் டத்தில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேரடியாக பங்கேற்று, குவாரியால் பாதிக்கப்பட்ட அனை வரின் கருத்தையும் நேரடியாக கேட்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.