நாமக்கல் மே 27 உதவித்தொகை கேட்ட விண் ணப்பங்களின் மீது உரிய நடவ டிக்கை எடுத்திடக்கோரி மாற்றுத்திற னாளிகள் சங்க மாநாடு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின், மோகனூர் ஒன்றிய குழு முதல் மாநாடு, மோகனூர் அரிமா சங்க மண் டபத்தில் மாதேஸ்வரன் தலைமை யில் நடைபெற்றது. சங்க கொடியை மேல்பரளி கிளை தலைவர் பெரிய சாமி ஏற்றி வைத்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட அமைப்பா ளர் எம்.ஆர்.முருகேசன் பேசினார். வேலை அறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கையை ஒன்றிய குழு செயலாளர் பெருமாள், பொருளா ளர் முருகேசன் ஆகியோர் முன்வைத் தனர். மாநாட்டை நிறைவு செய்து வைத்து அகில இந்திய செயல் தலை வர் நம்பு ராஜன் உரையாற்றினார். இதில், நூறு நாள் வேலை அனைத்து ஊராட்சிகளிலும் தொடர்ச்சியாக வழங்க வேண்டும். நான்கு மணி நேர வேலைக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும், புதிதாக உதவித் தொகைக்கு விண்ணப் பித்து காத்திருக்கும் அனைவருக் கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும். காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிக ளுக்கு டூ வீலர் லைசென்ஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், ஒன் றிய தலைவராக மாதேஸ்வரன், செய லாளராக பெருமாள், பொருளாள ராக முருகேசன் உள்ளிட்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். முடி வில், கிளைத் தலைவர் சண்முக தாஸ் நன்றி கூறினார். சேலம் இதேபோன்று, மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக் கான சங்கத்தின் சேலம் மாவட்ட, ஓம லூர் தாலுகா இரண்டாவது மாநாடு ஓமலூர் சந்தை திடலில் உள்ள சமு தாயக்கூடத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தாலுகா துணை தலை வர் மீனா தலைமை தாங்கினார். மாநாட்டு கொடியை ரமேஷ் அவர் கள் ஏற்று வைத்தார். மாநாட்டை மாவட்ட செயலாளர் எம். குணசேக ரன் துவக்கி வைத்தார். நடைபெற்ற பணிகள் குறித்து தாலுகா செயலா ளர் சாவித்திரி. வரவு செலவு அறிக்கை பொருளாளர் அன்பரசு சமர்ப்பித்தனர்.மாநாட்டை வாழ்த்தி மாவட்டப் பொருளாளர் எம். கனக ராஜ், மாவட்ட தலைவர் பி.அரிகி ருஷ்ணன், மாநாட்டை நிறைவு செய்து மாநில தலைவர் தோ. வில் சன் உரையாற்றினார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் தலைவர் டி. கோபிநாத், செயலாளர் எம். மீனா, பொருளாளர் ரமேஷ் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.