நாமக்கல், நவ.17- பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப் பட்ட பிஎஸ்என்எல் டவரை, மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலி யுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ஊனாந்தாங் கல் ஊராட்சிக்குட்பட்ட பெரியவரவூர், சின்ன வரவூர், கீரைக்காடு, குட்டைக்காடு, புது வலவு, பெரிய செக்கடி, சின்ன செக்கடி, கொளக்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீண்ட நாட்களாக செல்போன் சிக்னல் கிடைக்காமல் மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத் துக்குள்ளாகி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஊர் பொதுமக்க ளின் பல கட்ட போராட்டத்தின் விளைவாக, பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் பல கோடி ரூபாய் செலவில் 2 செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டனர். ஆனால், தற்போது அவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனைக் கண்டித்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிறன்று பெரியவரகூர் நியாய விலைக்கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளைச் செய லாளர்கள் எஸ்.சுப்பிரமணி, பி.சண்முகம் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஏ.டி.கண்ணன், ஒன்றியச் செயலாளர் வி.பி.சபாபதி, மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சின்னசாமி, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எ.பழனிச் சாமி, எஸ்.நர்மதாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, செல்போன் டவர் மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வராவிட்டால், செல்போன் டவர் அருகே அமர்ந்து தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என போராட்டக் காரர்கள் தெரிவித்தனர். தொழில்நுட்ப பிரச்சனை இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவன அதி காரிகள் கூறுகையில், நாமக்கல் மாவட்டத் தில் மொத்தம் 27 பிஎஸ்என்எல் டவர் அமைப்ப தற்கு திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. யுனிவர்சல் சர் வீஸ் அப்ளிகேஷன் ஃபண்ட் (USOF) என்ற திட்டத்தின் மூலமாக செல்போன் சிக்னல் கிடைக்காத மலை பகுதிகளுக்கு புதிய டவர் கள் அமைப்பதற்கு ஜியோ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஜியோ நிறுவனம் மேற்படி பகுதிகளில் செல்போன் டவர் அமைத்தால், தங்களுக்கு போதுமான லாபம் கிடைக்காது என்று கருதி மேற்படி பகுதிகளில் செல்போன் டவர் அமைக்க மறுத்துவிட்டது. எனவே, நீண்ட நாட்களுக்கு பின்னர் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 27 செல்போன் டவர் அமைப்பதற்கான அனு மதியை ஒன்றிய அரசு வழங்கியது. குறிப் பாக, கொல்லிமலையில் 13 இடங்களிலும், அடிவாரப்பகுதியில் 3 இடங்களிலும் (பெரிய கோம்பை, கொழக்கமேடு, பெரிய வரகூர்) செல்போன் டவர் அமைக்கப்பட்டது. அதில் கொல்லிமலையில் 10, அடிவாரப் பகுதிகளில் 3 டவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப் பட்டுள்ளது. மீதமுள்ள 4 டவர்களில் சிக் னல் கிடைப்பதில் தொழில்நுட்ப பிரச்சனை உள்ளது. எனவே, மேற்கண்ட செல்போன் டவர்களுக்கு மாற்று அல்லது புதிய தொழில் நுட்பத்தின் மூலம் சிக்னல் கிடைக்க சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். கம்பி வடம் மூலம் இணைப்பு குறிப்பாக, பெரியவரகூர் செல்போன் டவ ருக்கு சிக்னல் கிடைப்பதற்கு அந்தப் பகுதி யில் உள்ள மலையில், இரண்டு மீட்டர் தடை யாக உள்ளதாகவும், மலையின் இரண்டு மீட்டர் உயரத்தை அகற்றுவதற்கு வனத் துறை சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளிடம் அனுமதி பெறுவது மிகவும் கடினம். ஆகவே, கொழக்கமேடு பகுதியில் இருந்து கம்பி வடம் மூலமாக இணைப்பு கொடுக்கப்பட்டு, 15 நாட்களுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நிர் வாக அனுமதிக்காக பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனத்தின் நாமக்கல் பொது மேலாளர், மண்டல பொது மேலாளர் ஆகி யோரின் நிர்வாக அனுமதிக்காக காத்திருப்ப தாக தெரிவித்தனர். நிர்வாக அனுமதி கிடைத் தவுடன், பெரிய வரகூர் கோம்பை பகுதி செல் போன் டவர் உடனடியாக மக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்த னர்.