சேலம், டிச.6- பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6 ஆம் தேதியை நினைவு கூறும் வகையிலும், வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வேண்டும் என வலியு றுத்தி புதனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வழிபாட்டு தலங்களை பாது காக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக மத நல்லி ணக்கத்தை பாதுகாக்க வேண்டும். சிறுபான்மை மக்கள் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யும், பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6 ஆம் தேதியை நினைவுகூறும் வகையிலும், தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்ற கழகம் சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமுமுக சேலம் மத்திய மாவட்டத் தலைவர் ஷேக் முக மது தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை. சண்முகராஜா, திமுக பொதுக்குழு உறுப்பினர் அமான் என்கிற நாசர் கான், விசிக மாவட்டச் செயலாளர் காஜா மைதீன், தலைமை பிரதிநிதி ஷாஜகான் உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவர் என்.சுபேதார் தலைமை வகித்தார். இதில் மாநில துணைத்தலைவர் ஹமீது, திமுக மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ. சுப்பிரமணி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் ஏ.குமார், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெய ராமன், சமூக நல்லிணக்க மேடை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.சிசு பாலன், பொ.மு.நந்தன், விசிக மாவட் டச் செயலாளர் த.கு.பாண்டியன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.நியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை உக்கடம் பகுதியில் தமு முக சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் சர்புதீன், மாவட் டச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மமக மாவட்டச் செயலாளர் இப்ரா ஹிம், தபெதிக பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன், திராவிடத் தமிழர் கட்சித் தலைவர் வெண்மணி மற்றும் மாமன்ற உறுப்பினர் அஹமது கபீர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு, கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமு முக தலைவர் சித்திக் தலைமை வகித் தார். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் கோவை அக் பர் அலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர். ரகுராமன், திமுக மாணவர் அணி மாநில துணைச்செயலாளர் வீரமணி உட்பட திரளானோர் கலந்து கொண்ட னர்.