ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட் டத்தில் இணைக்க வலியுறுத்தி, புதனன்று சேலம் கோட்டை மைதானத்தில், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாநில செயற் குழு உறுப்பினர் எம்.மணிமாறன், மாவட்டச் செயலாளர் தமிழ்ச் செல்வன், தலைவர் சிவசங்கர், பொருளாளர் சோலைமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.