districts

img

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்கக் கோரி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக.12 - குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850 வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு  அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க தினர் திருப்பூர், அவிநாசி, தாராபுரம்  ஆகிய பகுதிகளில் சனியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன் வாடி, வருவாய், கிராம உதவியாளர்,  ஊர்ப்புற நூலகர் போன்ற சிறப்பு ஓய் வூதியம் பெறுவோர் அனைவருக் கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.  7850 வழங்க கோரி தமிழ்நாடு அரசு  அனைத்து துறை ஓய்வூதியர் சங்க  வட்டக்கிளை தலைவர் பி.மகுடேஸ் வரன் தலைமையில் திருப்பூர் வடக்கு  வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், வட்டக்  கிளை இணைச்செயலாளர் பி.சுப்ர மணியம் வரவேற்றார். வட்டக்கி ளை செயலாளர் ஜி.நாகராஜன் கோரிக்கைகள் குறித்து பேசினார். ஓய்வுபெற்ற காவலர் நலச் சங்க  மாவட்டத் தலைவர் வி.பி.பாலகிருஷ் ணன், தமிழ்நாடு சத்துணவு அங்கன் வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலை வர் கே.முத்தமிழ்ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஓய்வூதியர் சங்க  மாவட்டத் தலைவர் ஜி.சண்முகம் சிறப் புரையாற்றினார். இதில் ஓய்வூதியர் கள் திரளானோர் பங்கேற்றனர்

அவிநாசி:

அதேபோல அவிநாசி வட்டாட்சி யர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட் டக்கிளை தலைவர் கோபாலகிருஷ் ணன் தலைமை வகித்தார். இதில், வட்டக் கிளைச் செயலாளர் ரீட்டா மேரி, சாமிநாதன், மாவட்டத் துணைச் செயலாளர் நடராஜ், கிளை  பொருளாளர் சண்முகம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட இணைச் செயலாளர் ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தாராபுரம்:

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் கிளைத் தலைவர் எம்.பீர்ஜாபர் தலைமை யில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. செயலாளர் பட்டு கே.ராஜேந் திரன் வரவேற்றார். தமிழ்நாடு ஊரக  வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை  அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட  தலைவர் ஆ.மணியன் மற்றும் நிர்வா கிகள் பி.ரீட்டா, பி.நாகேஸ்வரன், எம். ரங்கநாதன், என்.அம்புஜம், ஜி. பெரியசாமி உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். முடிவில்  ஓய்வூதியர் சங்கத்தின் பொருளாளர்  எம்.நசுருதீன் நன்றி தெரிவித்தார்.