districts

img

பழங்குடிகளின் நிலம் ஆக்கிரமிப்பு: ஈஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை, ஆக.10- பழங்குடி மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஈஷா நிறு வனத்தை கண்டித்து வடவள்ளியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழங்குடியின மக்கள் நில அபக ரித்து மேற்கு தொடர்ந்து மலைப்பகுதி யில் ஈசா யோகா மையம் கட்டப்பட்டுள் ளது. எனவே, அரசு தலையிட்டு நிலங் களை மீட்டு பழங்குடியின மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஈசா யோகா மையத்தை அரசுடைமையாக்க வேண் டும். கார்ப்பரேட் சாமியாரான ஜக்கி வாசு தேவ்-ன் சட்டவிரோத செயல்களை  வெளிக்கொண்டு வர வேண்டும். கோவை யிலிருந்து கார்ப்பரேட் சாமியாரை விரட்டி அடிக்க வேண்டும். மணிப்பூரில் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியின மக் களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை, வடவள்ளி பேருந்து நிலை யம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு பேராசிரியர் காமராஜர் தலைமை வகித்தார். இதில், தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், புரட்சி கர இளைஞர் முன்னணியின் தமிழ் நம்பி, திராவிடர் தமிழர் கட்சியின் செந் தில், திராவிடர் விடுதலை கழகத்தின் நேருதாஸ் உட்பட 100க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.