உடுமலை, மே 27- கோழிப்பண்ணையால் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் ஈ தொல்லை அதிக ரித்துள்ளது. நோய் தொற்று ஏற்படுவதற்குள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் சார்பில் செவ்வா யன்று இராமசந்திரபுரம் சுகாதார ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் அணிக்கடவு கிளைச் செயலாளர் விஜ யகுமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது, குடிமங்கலம் ஒன்றியம் அணிக்கடவு கிராமம் இராமசந்திராபுரம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள கோழி பண் ணையில் இருந்து கடந்த ஒருவார காலமாக கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஈ தொல்லையும் அதிகரித் துள்ளது. இதனால் அருகில் உள்ள மருத்துவமனை, குடி யிருப்புகளில், பள்ளிகளில் ஈக்களின் தொல்லை அதிகரித்து, உணவைக் கூட உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. இதனால் மனிதர்களுக்கும், கால்நடை களுக்கும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள் ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறப்பட் டுள்ளது.